India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நடவடிக்கை எடுக்காததால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாமகவுக்கு போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி காரணமாக தற்போது 133 நபர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் , 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அதிலிருந்து விலக்கல் கேட்டு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேரதலுக்கு 1417வாக்குச் சாவடி மையங்களும், அதில் 178 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அம்மையங்களில் வாக்குப்பதிவின் போது நேரலை வீடியோ பதிவு செய்யப்படும் என்றார்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம்(காஞ்சிபுரம்), டி.ஆர்.பாலு(ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இன்று மாலை 5 மணிக்கு தமிழர் விடுதலைக் கட்சியின் சார்பில் மக்களுக்காக அரசா? மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு பொதுக்கூட்டம் நடத்தி வருவது பெரும் குழப்பத்தில் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று(16.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு துணை வாக்குச் சாவடிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024) விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.