India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியதுடன், காஞ்சிபுரம் மக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் ஆட்சியர் கலைச்செல்வி.
காஞ்சிபுரம் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <
காஞ்சிபுரம் மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.
தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் உள்ள ஏகேடி தெரு பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் இளைய மகள் கார்த்திகா. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக்.13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திடீர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. BE பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <
காஞ்சிபுரம் சாலைத்தெரு குஜராத்தி சத்திரம். திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. குன்றத்தூர் முருகன் கோவில் அருகில் வைத்தியலிங்கம் பேலஸ். கெருகம்பாக்கம் ஆர்.எஸ் மஹால். ஸ்ரீபெரும்புதூர் வல்லம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வாலாஜாபாத் களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நாளை (அக்டோபர் 14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது, இந்த முகாமில் அனைத்து அரசு சேவைகளையும் பெறலாம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் உள்ள ஏகேடி தெரு பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் இளைய மகள் கார்த்திகா. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திடீர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.