Kanchipuram

News April 14, 2024

காஞ்சிபுரம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ( IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A FL3AA மற்றும் FL11 ஆகியவை வரும் 21 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி ஆகிய நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News April 14, 2024

கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

image

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News April 13, 2024

காஞ்சிபுரம் அருகே 1425 கிலோ தங்கம் பறிமுதல்

image

குன்றத்தூர் பகுதியில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் விசாரணையில் வெளிநாட்டிலிருந்து விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.

News April 13, 2024

மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு

image

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் வருகிற மக்களவைத் தேர்தலை  புறக்கணித்ததாக அறிவிப்பு வெளியிட்டனர்.  இதனை தொடர்ந்து நாகப்பட்டு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்ற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பதாக அறிவித்து தமிழக அரசு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News April 13, 2024

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி

image

இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

News April 12, 2024

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி

image

இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

News April 12, 2024

விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தொழில் நிறுவனங்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News April 12, 2024

காஞ்சிபுரம் வருகிறார் முதலமைச்சர்

image

காஞ்சிபுரம், படப்பை அருகே கரசங்கால் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

News April 12, 2024

காஞ்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் மாநகரில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

News April 12, 2024

காவலர்கள் 814 நபர்கள் தபால் ஓட்டு

image

மக்களவைத் தேர்தல் துவங்க உள்ள நிலையில், தபால் ஓட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கான தபால் ஓட்டு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் 814 நபர்கள் தங்கள் வாக்குகளை தபால் முறையில் பதிவு செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!