India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 – பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று (06.05.2024) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 12,541 பேர் முடிவுக்காக காத்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 92.28% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.46% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம் 30வது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.
திருக்கச்சியேகம்பம் என பழைய சமய நூல்களில் குறிப்பிடப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தேவாரம் பாடலில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். பஞ்சதலங்களில் ஒன்றான இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை இங்கு திருப்பணி செய்ததற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றன. இத்தலம் மிகவும் தொன்மையான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.98% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 89.08% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், பூ கடை சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(மே 6) காலை 4 மணி அளவில் காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சூரிய பகவான் தன் கோர தாண்டவத்தை காட்டினார். இந்நிலையில் இதனை சற்றே தணிக்கும் விதமாக வருண பகவான் கருணையால் நேற்று(மே 5) இரவு 11.30 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. காஞ்சி மாநகரமே இந்த மழையால் குளிர்ச்சி அடைந்துள்ளது. திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் மாட வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சீதாராம திருக்கல்யாண உற்சவம் நேற்று(மே 5) நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தில் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் முன்னிலையில் சீதாராமன் கல்யாணம் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை திங்கட்கிழமை மே 6 காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண தமிழக அரசு சார்பில் https:// www.dge.tn.nic.in., என்ற இனியதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், தண்டலம் கூட்டு சாலை சந்திப்பில் இன்று இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜேஷ் (29) வெங்கடேசன் (62)ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.