India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 81.59% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 72.12 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.19 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 81.32% பேரும், மாணவியர் 92.12% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.98% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. காஞ்சி மாவட்டம் 33வது இடத்தை பிடித்துள்ளது.
காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் பொன்னி, மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதே போல், மதுரை டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி, ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய அறிவுரை வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சில தினங்களாகவே காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடுபோயின. இந்நிலையில் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த போலீசார் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகம்மதுபேட்டை பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ஏழு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சி உள்ளிட்ட 11 மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய ரயில் நிலையத்தில் சென்னை பீச் வரை செல்லும் மின்சார தொடர் வண்டியில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோது ரயில் புறப்பட்டதால் 3 பயணிகள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் முன்பு நின்று கொண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.