India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர் அடுத்த ஒரத்தூர் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரன் கோவில் தெருவில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு ஜோதி என்பவர் பூச்சு வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை செய்யும் போது மின் விளக்கு கட்டப்பட்டிருந்த பலகை ஜோதி மீது விழுந்தது. அதில் மின்சாரம் தாக்கி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ராமானுஜபுரம் பகுதியில் விவசாயிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென என்று பெய்த லேசான மழைக்கு நெல் முட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவகல்லூரியின்
சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில் காஞ்சி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, கல்லூரி முதல்வர் இராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டு
மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய 12 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர்கள் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி கரையில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கனரக ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி கரையில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கனரக ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சி மாவட்டம் பிள்ளையார்பாளையம், மதனபாளையம் தெருவில் வசிக்கும் எஸ்.எஸ்.கே.வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவன் யுகேஷ் செல்வன் 495/500 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பிடித்ததையொட்டி காஞ்சி மாவட்ட அ.தி.மு.க.மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் மாணவன் வீட்டிற்கே சென்று பாராட்டினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாங்காடு நகர செயலாளர் பிரேம்சேகர், குன்றத்தூர் ஒன்றிய பாசறை செயலாளர் எம்.பி.பாரத்ராஜ் ஏற்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, வி. சோமசுந்தரம், பா.பெஞ்சமின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் தங்க தேர் இழுத்து வழி பட்டனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் ரூ.28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 66,040 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.