Kanchipuram

News May 28, 2024

குதிரை வாகன பெருமாளுக்கு பரிவட்டம் விழா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் டி.கே.நம்பி தெருவில் உள்ள ஸ்ரீதிருமலை ஆழ்வார் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் வந்த பெருமாளுக்கு பூரண கும்ப பரிவட்டம் விழா நடைபெற்றது. இதில் மண்டபத்தில் அருளிய பெருமாளுக்கு ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் தரிசனம் செய்து பரிவர்த்தத்தை கண்டு களித்தார்கள். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். 

News May 27, 2024

டென்சிங்க் நார்கே தேசிய சாகச விருதுக்கு அழைப்பு

image

நீர், நிலம், மலை போன்ற சாகசத் துறைகளில் (Adventure Sports) இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், டென்சிங்க் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஜூன் 14 வரை http://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News May 27, 2024

காஞ்சி கலெக்டர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், நிறுவனத்தின் (OMCL) வழியாக முதன் முறையாக ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் பணிபுரிய இலவச வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. OMCL இணையதளமான www.omcmanpower.tn.gov.in-இல் விருப்பமுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

News May 27, 2024

பெண்கள் அறையை எட்டிப் பார்த்த இளைஞன் பலி

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் பணி பெண்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அறையை பரசுராம் (28) என்ற இளைஞன் நேற்று எட்டி பார்த்துள்ளார். இதையறிந்த பெண்கள் அலறியுள்ளனர் . சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அடித்ததில் பரசுராம் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில், அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வாரணவாசி பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News May 25, 2024

ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு

image

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்து 1500 போலீஸார் ஈடுபடுகின்றனர்.

News May 25, 2024

ஏரியில் குளிக்க சென்ற இளைஞன் பலி

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று குளிக்க சென்ற வி.ஆர். பி. சத்திரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் நீரில் மூழ்கி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி  இன்று மதியம் சூரியாவி உடலை மிட்டனர். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News May 25, 2024

காஞ்சியில் நாளை திருத்தேர் விழா.

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவிலில் நாளை காலை 4 மணிக்கு திருத்தேர் உற்சவ வீதி உலா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும்மாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 25, 2024

காஞ்சிபுரம்: போலி நகை மோசடி வழக்கில் இருவர் கைது

image

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில், போலி நகையை தங்க நகை என அடகு வைத்து ரூ.2.62 கோடி பெற்றுக்கொண்ட அரக்கோணம் அருகே பல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்படுள்ளனர். மண்டல மேலாளர் ராஜாராம் கொடுத்த புகாரின் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 24, 2024

அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

இந்திய இராணுவத்தால் அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர்மன் தேர்வு மையத்தின் மூலமாக 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பணி நடத்தவிருப்பதாகவும், இதில் கலந்துகொள்வதற்கு 05.06.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

காஞ்சி காமகோடி பீடம் பற்றிய குறிப்பு!

image

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது காஞ்சி காமகோடி பீடம். காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்தன. பல்வேறு கருத்துகலுடன் இருந்தாலும் இந்து சமயத் துறவியான ஆதிசங்கரர் நினைவாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. ஆன்மீக பரப்புரைகளும் கோட்பாடுகளும் பின்பற்றி கற்பிக்கும் கூடமாகவும் இருந்து வருகிறது. பல சங்கராச்சாரியார்கள் இதன் தலைவர்களாக இருந்து பொறுப்பேற்று வருகின்றனர்.

error: Content is protected !!