India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீ பெரும்புதூரில் பெண் தொழிலாளா்களுக்காக ரூ.706 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினாா். விருதை, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.சிவமலா் பெற்றுக்கொண்டாா்.
சிப்காட் மெகா குடியிருப்பு மூலம் 18,720 பெண்கள் பயன்பெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த குடியிருப்பை முழுவதுமாக பாக்ஸ்கான் நிறுவனம் எடுத்து கொள்கிறது. பணிபுரியும் பெண்களுக்கென்று தனி கிராமமே அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த கட்டிடத்திற்கான முழு நிதியை தமிழக அரசு தான் கொடுத்துள்ளது” என்றார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக சிப்காட் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.706.50 கோடி செலவில் 18,720 படுக்கைகள் கொண்ட மெகா குடியிருப்பு வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக வளாகத்தில் மரக்கன்றினை நட்ட அவர், பின்னர் வளாகத்தைத் திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.
இந்த வளாகம், தரைத்தளம் மற்றும் 10 அடுக்குமாடி கட்டிடமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பிரிவுகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில், ஒவ்வொரு பிரிவிலும் 1,440 நபர்கள் தங்கும் வகையில் 240 அறைகள் அமைந்துள்ளது. இங்கு குடிநீர், துணை மின் நிலையம், நவீன தீயணைப்பு வசதிகள், உட்புறச் சாலைகள், தெருவிளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் 2ஆவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருவதோடு, பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்” என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் பகுதியில் ரூ.706.5 கோடி மதிப்பில் 18,420 படுக்கைகள் கொண்ட மகளிர் விடுதியை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க வருகை தந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பூ கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார், உடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கணேசன், அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக நாள்தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றோம் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக. ஓட்டு போட உரிமை உள்ள அனைவரும் முதல்வராக உரிமை உள்ளது. மக்கள் தான் எஜமானர்கள். அதனால், ஜாதி மதத்திற்கு இங்கு வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.
தமிழக அரசு வழங்கக்கூடிய மகளிர்க்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதிவு செய்யாதவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 17, 18,20 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக செய்தி பரவியது. இது பொய்யான தகவல் என்றும் இதில் எந்த உண்மையும் இல்லை யாரும் இதனை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.