Kanchipuram

News June 10, 2024

அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மனு

image

காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேற்படி குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி மாநகராட்சி பணியாளருக்கான அடிப்படை ஊதியமான ரூ.14,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யவும் அதற்கான நிலுவைத் தொகையினை வழங்குமாறு ஆட்சியர் கலைச்செல்வியிடம் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.

News June 10, 2024

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் துரை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மக்கள் குறைதீர் நாளில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

News June 10, 2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று(ஜூன் 10)காலை 11 மணியளவில் அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். மேலும், கல்வித்துறையை முதன்மை துறையாக மாற்றுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.

News June 10, 2024

மாணவ ஆதார் மையம் திறப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிள்ளையார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாமிநாத மேல்நிலைப் பள்ளியில் இன்று(ஜூன் 10)காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கான ஆதார் மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 8,150 ஆப்சென்ட்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கு 40,721 பேர் விண்ணப்பித்திருந்தனர் . நேற்று (ஜூன் 9) நடைபெற்ற தேர்வுக்கு 32,571 பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 8,150 தேர்வாளர்கள் தேர்வினை எழுதவில்லை என டி.என்.பி.சி தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வானது 96 மையங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

News June 10, 2024

புத்தகக் கடைகளில் படையெடுக்கும் மாணவர்கள்

image

கோடை விடுமுறை முடிந்து இன்று(ஜூன் 10) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதனால் நேற்று(ஜூன் 9) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புத்தகக் கடைகளிலும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வாங்க பெற்றோருடன் மாணவர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புத்தக கடைகளும் ஞாயிறு விடுமுறையிலும் திறந்து வைத்து விற்பனை செய்தனர்.

News June 9, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு 9 மணிக்கு மூடிய கதவு

image

தமிழக முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் உள்ள பில்லா பாங் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 9:00 மணிக்கு நுழைவாயில் மூடியதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் நுழைவாயில் முன்பு காத்திருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தேர்வாளர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

News June 9, 2024

மாணவர்களுக்கான சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது

image

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 07.06.2024 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பன்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்ய செய்யலாம்.

News June 8, 2024

இளம்பெண்ணை கொலை செய்து கால்வாயில் வீசிய அவலம்

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்து சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் பணி செய்து வந்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் தேவி (32) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு மழை நீர் கால்வாய் வீசப்பட்டுள்ளார் . தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!