Kanchipuram

News June 19, 2024

காஞ்சியில் மழை வெளுத்து வாங்கும்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்து 650 கனஅடியாக அதிகரித்து, நீா்மட்ட உயரம் 15.72 அடியாக உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News June 18, 2024

காஞ்சிபுரம்: பெண் காவலரை வெட்டிய கணவர் கைது!

image

காஞ்சிபுரம், சங்கரமடம் அருகே உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணியை அவரது கணவர் நேற்று அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லிராணி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.

News June 18, 2024

காஞ்சிபுரம்: இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாமில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News June 18, 2024

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும்”

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது நல்லது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில், “அரசியல் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில், இது ஜனநாயக நாடு. எனக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். ஏனெனில், அந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது” எனக் கூறினார்.

News June 18, 2024

பெண் போலீஸ் மீது வெறிச்செயல்; கணவர் தலைமறைவு

image

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லிராணி – மேகநாதன் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் டில்லிராணியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவரது கணவர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவான மேகநாதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News June 17, 2024

பெண் காவலர் தாக்குதல் சம்பவத்திற்கு..இபிஎஸ் கண்டனம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் டெல்லி ராணி என்ற பெண் காவலரை கணவர் மேகநாதன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பேசிக் கொண்டிருந்தபோது கையில் இருந்த பட்டா கத்தியால் பெண் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மின்தடை

image

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை மற்றும் விஷ்ணு காஞ்சி பிரிவுகளுக்கு உட்பட்ட காந்தி ரோடு உயர் அழுத்த மின் பாதையில் நாளை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை சிறப்பு பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மிலிட்டரி சாலை விசுவதாஸ் நகர், அப்பாவு நகர்,கணேஷ் நகர், சுந்தர விநாயகர் நகர், டெம்பிள் சிட்டி, எம் எம் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என ஒரிக்கை மின்சார வாரியம் அறிவித்தது.

News June 17, 2024

காஞ்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்! 

image

காஞ்சிபுரம், சங்கரமடம் அடுத்த சாலை தெருவில் உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணி அவரது கணவர் இன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் டெல்லிராணியை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். பணியில் இருந்த பெண் காவலரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

News June 16, 2024

தங்கம் வென்ற காஞ்சிபுரம் வீரர்கள்

image

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 27 மாநிலங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒன்மேன் மர்ஷிஸ் அகடாமி சார்பில் கலந்து கொண்ட 5 கிக் பாக்ஸிங் வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். இதைதொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

News June 15, 2024

காஞ்சிபுரம்: கூகுள் பே மூலம் கொள்ளை!

image

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் கத்தியை காட்டிக் மிரட்டி கூகுள் பே மூலமாக வழிப்பறி செய்து வருகின்றனர். இதன் தொடர்பாக இன்று கூகுள் பே மூலம் ரூ.2 லட்சம் வரை கொள்ளையடித்த வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!