India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, வழக்குகளுக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால், நேற்று கவுன்சிலர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்துச் சென்றதால், மேயர் பதவி பறிக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த குறை கேட்பு கூட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் குறை கேட்பு கூட்டம் வருகிற 30.7.2024 காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படவிருக்கிறது. இதன் படி 51 கவுன்சிலர்களில் 41 பேர் வாக்களிக்க வேண்டும். இதில் மேயருக்கு ஆதரவாக 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு எதிராக இருந்த 33 கவுன்சிலர்களில் 15க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்களை அவர்கள் குடும்பத்துடன் நேற்று மாலை சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். இதனால் தீர்மானம் மேயருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.
காஞ்சிபுரத்தின் மேயராக உள்ள மகாலட்சுமியின் கணவர் யுவராஜின் ஆதிக்கம் நிர்வாகத்தில் அதிகம் உள்ளதாக அதிர்ச்சியடைந்த 33 கவுன்சிலர்களின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தடையில்லை என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன் படி மேயர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை(ஜூலை 29) நடைபெறவிருக்கிறது. மேயரின் பதவி காப்பாற்றப்படுமா? உங்களின் கருத்துகளை பதிவிடவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று(26/7/24) மாலை 5 மணி அளவில், காஞ்சிபுரம் அமமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக கரிகாலனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார். இதை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கரிகாலனுக்கு அமமுகவினர் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த டி.டி.வி வழிமுறைகள், ஆலோசனைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் குரூப் 2 தேர்வில் வருவாய் துறை அலகில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் இலவச வீட்டு மனை பட்டாவை கணக்கு பதிவேட்டில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். இதற்காக, கிராம நிர்வாக அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிரான வாக்கெடுப்புக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்த கூடாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், திமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், மேயர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக இருப்பதாகக் நீதிபதி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ், மாநகராட்சியில் நிர்வாகத்தில் தலையிடுவதாக 33 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்நிலையில, நேற்று நடைபெற்ற தலைமை பேச்சுவார்த்தையில், கவுன்சிலர் குற்றச்சாட்டின் பேரில் கணவரின் ஆதரவாளரான பிரகாஷ் மற்றும் டெல்லி குமார் ஆகிய இருவரையும் திமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்ச்செம்மல் விருது பெற வரும் ஆக.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆா்வலா்களை கண்டறிந்து அவர்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட உளள்து. அவருக்கு, ரொக்கமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. தகுதியுடையவா்கள் <
Sorry, no posts matched your criteria.