Kanchipuram

News August 4, 2025

காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பின்படி, நாளை (ஆகஸ்ட் 5) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம் வார்டு எண் 24, 25, திருப்பெரும்புதூர் நகராட்சி வார்டு எண் 2, 4, குன்றத்தூர் ஒன்றியத்தில் வைப்பூர் ஊராட்சி மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்தில் சாலவாக்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News August 4, 2025

காஞ்சிபுரத்தில் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பாண்டவதூதப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான கிருஷ்ணர் சுமார் 25 அடி உயரத்தில், அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். புதிய தொழில் தொடங்குபவர்கள், பணியிடத்தில் முன்னேற்றம் விரும்புபவர்கள்,எந்த தடைகளும் இல்லாமல் இருக்க இங்கு வேண்டி கொள்கிறார்கள். ஷேர் பண்ணுங்க மக்களே!

News July 11, 2025

காஞ்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்

image

காஞ்சியில் (18 ஜூலை) காஞ்சி, வேலூர்,அரக்கோணம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில விவசாய மற்றும் வியாபாரிகள் நல சங்க தலைவர் கே.எழில் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன், ஏற்றுமதி, மற்றும் ஒப்பந்த விவசாயம் பற்றிய ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்க உள்ளனர். 98942 22459 என்ற எண்ணில் கேட்டு பயன்பெறலாம்.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶காஞ்சிபுரத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<>இந்த லிங்கில்<<>> காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். பாலிசி குறித்து தெரிந்து கொள்ள காஞ்சிபுரம் அதிகாரிகளை (044-27222901, 044-27224600) தொடர்பு கொள்ளுங்கள். <<17027973>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

சித்தியை கொடூரமாக வெட்டி கொலை

image

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அடுத்த நல்லூரில் சமாதானம் செய்வதற்காக சென்ற சித்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அண்ணன் – தம்பி இடையிலான இடப்பிரச்சனையில், சித்தி சுமதி சமாதானம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மகன் உறவு கொண்ட துரை என்பவர் சுமதியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 11, 2025

கிராம உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பம்

image

திருப்பெரும்புதூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் டாட் என்ஐசி டாட் இன் என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 10, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

காஞ்சியிலிருந்து சிறப்பு பேருந்துகள்

image

இன்று ஜூலை 10ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரத்திலிருந்து தி.மழைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பயணியர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் திரளான பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

error: Content is protected !!