India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினருக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத் தலைவர் 3, பழங்குடியின சங்கத் தலைவர் 1, ஆதிதிராவிட வழக்குறைஞர் 1, ஆதிதிராவிட பேராசிரியர் 1, ஆதிதிராவிட தொழிலதிபர் 1, ஆகிய 7 பதவிகளுக்கு விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபாலிலோ 28.3.2025 க்குள் அனுப்பி வைக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுமார் 56 தேர்வு மையங்களில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (மார்ச் 21) கணக்குப்பதிவியல் தேர்வு நடைபெற்றது. தேர்வு எளிமையாக இருந்ததாக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மாணவ – மாணவியர் கருத்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் விவசாய நலன் காக்கும் கூட்டம் இன்று (மார்.21) நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “தேசிய அடையாள எண் பதிவு முகாம் நடைபெற்று வரும் நிலையில், கூட்டுப் பட்டாக்களை அதில் இணைக்க முடியவில்லை என்பதால் பிரதமரின் விவசாய நிதியை பெற இயலாத நிலை ஏற்படும். கைபேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம்” எனத் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய அட்டையை பெறுவதற்கு, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய அட்டை பெறாவிடில், மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 நிதி உதவியை முடியாது. எனவே, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒவ்வொரு கிராம உழவர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு விவசாய அட்டையை பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரி மற்றும் விவசாய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 95 இடங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில் 33 இடங்கள் என மொத்தம் 128 இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடும், ஊராட்சி தலைவர்கள் தலையீடும் இருக்க வேண்டாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியில் வசிக்கும் இளங்கோ (32), காஞ்சிபுரம் நகரில், மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதியில் நேற்று (மார்.20) வியாபாரம் செய்தபோது, உதயா (19) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியை காட்டி ரூ.1,000 பணத்தை பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி உதயாவை அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2023இல் 34 கொலைகள் நடந்ததாகவும், 2024இல் அவை 20ஆக குறைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தொடங்கியது முதல் முக்கிய ரவுடிகளின் செயல்பாடுகள் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடிகளான தியாகு, தினேஷ் மற்றும் தணிகா ஆகிய மூவரையும் தேடி பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த <
Sorry, no posts matched your criteria.