Kanchipuram

News July 31, 2024

அதிகாரிகளை விளாசிய அமைச்சர் த.மோ.அன்பரசன்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், “பி.டி.ஓக்கள் கிராமங்களுக்கே செல்வது கிடையாது. அலுவலகங்களுக்கு மட்டுமே செல்கின்றனர். பஞ்சாயத்தில் என்ன நடக்கிறது என கூட தெரியவில்லை. பஞ்சாயத்து செயலாளர்கள் வேலையே செய்வதில்லை, தண்ணீரில் குளோரீன் பவுடர் போடுவது இல்லை” என குற்றம் சாட்டினார்.

News July 30, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

மின்சார ரயில் சேவையில் மாற்றம்

image

பல்லாவரம் – தாம்பரம் – கூடுவாஞ்சேரி இடையே இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இரவு 11:30 முதல் அதிகாலை 2:30 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போன்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காலை 10:30 முதல் மதியம் 1:30 வரையும், இரவு 11:30 முதல் அதிகாலை 2:30 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

News July 30, 2024

பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி

image

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி, ராணி அண்ணாதுரை பள்ளி, கா.மு.சா. பள்ளி, டாக்டர். பி.எஸ். சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, ஆண்டர்சன் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை குறு, சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News July 30, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆண்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 30, 2024

காஞ்சிபுரம் நெசவாளருக்கு தேசிய விருது

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள முத்தீஸ்வரர் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணியம். நெசவாளரான இவருக்கு இந்தாண்டுக்கான ‘சிறந்த காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்’ என்ற தேசிய விருதை மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், தாமிரப் பட்டையும் வரும் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.

News July 30, 2024

காஞ்சிபுரம் மேயர் ராஜினாமா?

image

நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று தோல்வி அடைந்த நிலையில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமியின் பதவி தப்பியது. ஆனால், விரைவில் அவர் மாற்றப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், விரைவில் காஞ்சிபுரம் மேயர் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. அங்கு வேறொருவர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் கசிந்து வருகின்றன. உங்கள் கருத்து?

News July 29, 2024

காஞ்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

image

காஞ்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி செய்யப்பட்டுள்ளது. மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய திமுக கவுன்சிலர்கள் 22 பேர், நேற்று சொகுசு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு தீர்மானம் நிறைவேற்றபட இருந்த நிலையில், 12 மணி வரை யாரும் வராததால் ஆணையர் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், மகாலட்சுமி மேயராகவே தொடர்வார்.

News July 29, 2024

காஞ்சிபுரம் கவுன்சிலர்கள் தலைமறைவு

image

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நடைபெறவிருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்த கவுன்சிலர்கள் யாரும் இதுவரை வரவில்லை. மேயருக்கு எதிரான திமுக உள்ளிட்ட கன்வுசிலர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில், நேற்று திமுக கவுன்சிலர்கள் 22 பேர் சுற்றுலா சென்றதால், இன்று வாக்கெடுப்பு நடக்குமா? என்று தெரியவில்லை.

News July 29, 2024

நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்தாக வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பு ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நடைபெற இருந்த நிலையில், தற்போது வாக்கெடுப்பு ரத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!