Kanchipuram

News April 2, 2025

குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார்.இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு <>விண்ணப்பிக்கலாம்<<>>. நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் District Early Intervention Centre (DEIC) திட்டத்திற்கான பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 40 வயதுக்கு உட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

கார் மீது மோதிய மற்றொரு கார்: முதியவர் பலி

image

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (43). இவர், தனது காரில் தந்தை கோபாலகிருஷ்ணன் (79) உட்பட 4 பேருடன் ஊட்டிக்கு சென்றுவிட்டு நேற்று (ஏப்ரல் 1) காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சேதுராமனை (26) விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

காஞ்சிபுரம் உட்பட 4 சுற்றுலா மாளிகைகள்

image

தமிழகத்தில் உள்ள கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் புதியதாக 4 சுற்றுலா மாளிகைகள் ரூ.21.90 கோடியில் கட்டப்படும். கல்வராயன் மலை, ஏற்காடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் புதியதாக 3 ஆய்வு மாளிகைகள் ரூ.9.50 கோடியில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

News April 2, 2025

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது

image

அடுத்த 5 ஆண்டுகளில் 50 புதிய விமான நிலையங்கள் நிறுவப்பட உள்ளன; உடான் திட்டத்தின் கீழ் 2026 முதல் 2036 வரை 126 புதிய இடங்கள் உருவாக்கப்பட உள்ளன, மேலும் பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையங்கள் தேவை; சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது என மாநிலங்களவையில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு

News April 1, 2025

உங்கள் குடும்பத்திற்கு வற்றாத செல்வம் தரும் அற்புத கோவில்

image

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு உள்ள பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

News April 1, 2025

பர்ந்தூர் விமான நிலைய அனுமதி இந்த வாரம் வழங்கப்படும்

image

பரந்துார் விமான நிலைய இடத்தேர்வுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, திட்ட அனுமதிக்கு டிட்கோ விண்ணப்பம் செய்தது. இதை பரிசீலித்து வந்த மத்திய அரசு, இந்த வாரத்தில் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும். நிலம் தந்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

error: Content is protected !!