Kanchipuram

News August 30, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்திருக்கும் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்

News August 30, 2024

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் வளையாபதி கைது செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி, காஞ்சிபுரம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜி.கருணாகரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று விடுத்த அறிக்கையில், ‘காஞ்சிபுரம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட மதிமுக ஒன்றாக இணைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டமாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

News August 30, 2024

பெண் குழந்தைகளுக்கான விருதுகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

அரசு சமூக நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பங்காற்றிய 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-இல் மாநில அரசு ரூ.1,00,000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20/11/24 மாலை 5:45 க்குள் மாவட்ட சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 30, 2024

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி

image

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில், 11 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப மாவட்ட நலச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை செப்.12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

அரசு ஓய்வூதிய அலுவலர்களே, இதை மறந்துவிடாதீர்கள்

image

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் தொடர்பான தங்களது குறைகள் குறித்த மனுவை, வரும் செப்.17ஆம் தேதிக்குள் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அக்.4ஆம் தேதி நடைபெறவுள்ள குறைதீர் கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சங்கம் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கலாம். மேலும், முறையீட்டு மனுக்கள் மீதான குறைகளை, கூட்டம் நடைபெறும் நாளில் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

சர்வதீர்த்த குளத்தில் மிதந்த ஆண் சடலம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வதீர்த்த குளத்தில், ஆண் சடலம் ஒன்று நேற்று மிதந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் விசாரனை செய்ததில், அவர் காஞ்சிபுரம் திருப்புக்கூடல் தெருவைச் சேர்ந்த ராஜசங்கர்(47) என்பது தெரியவந்தது. அவர், படாளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கீதாவின் சகோதரர் என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

News August 30, 2024

முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அரசு விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ.6000/- வழங்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் மட்டும் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 30, 2024

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை மூன்று நகல்களில் காஞ்சிரம் மாவட்ட ஆட்சியருக்கு 17ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

ஒப்பந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 11 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக பணி நியமனம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், https://kancheepuram.nic.in என்ற இனையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 12.09.2024 க்குள் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மிதமான மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 9 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!