Kanchipuram

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

பஸ் பாஸ் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

image

காஞ்சிபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பஸ் பாஸ் அட்டை, மார்ச் 31ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

7 புனித நகரங்களில் ஒன்று காஞ்சிபுரம்

image

இந்தியாவின் 7 புனித நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரம். இது பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கோட்டையாக மாறியது. தனித்துவமான கட்டிடக்கலை அழகுடன் கூடிய பல அற்புதமான கோவில்களை அதன் பாரம்பரியத்திற்கு ஒரு செழுமையான சாட்சியம் ஆகும். பட்டு புடவைகள் கையிலேயே நெய்யப்பட்டு, 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.

News April 3, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Ed, B.Sc, BA, Diploma, M.Ed, M.Sc, MA, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்.10-க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும், தகவலுக்கு <>இங்கு கிளிக் <<>>செய்யவும். *நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள். நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 3, 2025

காஞ்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 கோவில்கள்

image

காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 கோவில்கள் உள்ளன. அவை, குமரகோட்டம் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், த்ரிலோக்யநாதர் கோயில், சத்யநாதேஸ்வரர் கோயில், சித்ரகுப்த சுவாமி கோயில், ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆகியன ஆகும். share to friens

News April 3, 2025

திருமணம் நடக்க இருந்த பெண் கொலை

image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (24). விக்னேஸ்வரிக்கு நாளை (ஏப்ரல் 4) திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 2) கொளத்தூர் சுடுகாடு அருகே விக்னேஸ்வரியின் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி, விக்னேஸ்வரி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீசார் விசாரித்து, தலையில் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு <>விண்ணப்பிக்கலாம்<<>>. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.

News April 3, 2025

3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியது

image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று. தெய்வீகமான இந்த மாமரத்தை சுற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாமரத்தில் மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த மாமரத்தில் எப்படி மாங்காய்கள் காய்க்கும் என ஆச்சரியத்துடன் பார்த்தபடி, பக்தர்கள் மரத்தை சுற்றிவந்து வழிபட்டனர்.

News April 2, 2025

காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்

image

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) ஒருங்கிணைந்த பயிற்சியுடன் கூடிய பிஇ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு இணையதளத்தை பயன்படுத்தி இன்றுமுதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!