India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டு தொடா்ந்து வலி இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்.23) வலி அதிகமாக இருந்ததால், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளாா். உறவினர்கள் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. சுமார் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளன. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்தூர் சந்திரசேகருக்கு சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், 30 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 75 பேருக்கு வேலை வாய்ப்புக்காக ஆணை வழங்கப்பட்டது. ஏனாத்தூர் சந்திரசேகருக்கு சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை துணைவேந்தர் ஸ்ரீநிவாசு, சார்பு துணைவேந்தர் வசந்தகுமார் மேத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஆதிகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை நீங்கும், திருமணமான தம்பதிகள் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.
சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <
சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கலை அருங்காட்சியகம் ஆகும், இது சர் சி.பி. ராமசாமி ஐயர் வாழ்ந்த 400 ஆண்டுகள் பழமையான வீட்டில் அமைந்துள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள், கற்சிலைகள், பாரம்பரிய உடைகள், கைத்தறி உடைகள், நகை மற்றும் உள்நாட்டு புத்தகங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
படப்பை அருகே மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. இவர் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, பைக்கில் சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதுார் – மணிமங்கலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குமரகோட்டம் முருகன் கோயில். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. பொதுவாக பெருமாளுக்குத் தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகம் குடைபிடித்த படி இருப்பதை காணலாம். திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் வாயிலாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 044 22262023 என்ற எண்ணில் அழைக்கலாம். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.