Kanchipuram

News September 5, 2024

நல வாழ்வுச் சங்கம் சார்பில் காலி பணியிடங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நல வாழ்வுச் சங்கம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூகப் பணியாளர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள், https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/08/2024083084.pdf என்ற இளையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் (செப்.12) க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News September 4, 2024

நவீன சலவையகம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம் மிகாமல் இருக்க என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவரின் உடல்

image

பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயின்ற ஆந்திராவை சேர்ந்த மாணவர் நிக்கில், கடந்த 31 ஆம் தேதி தாம்பரம் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் சிக்கினார். இதனால் நேற்று 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

News September 4, 2024

காஞ்சியில் மாவட்ட அளவிலான நேரடி வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாவட்ட அளவிலான நேரடி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் வரும் செப்.21-ஆம் தேதி நடைபெறவுள்ள, இம்முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவவும்.

News September 4, 2024

ராதாகிருஷ்ணன் 2024 விருது பெற்ற ஆசிரியர்கள்

image

சென்னை பள்ளிக் கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன்- 2024 விருதுகள் வண்டலூரில் அமைச்சர் உதயநிதி தலைமையில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மாவட்ட ஆசிரியர்களின் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சோமங்கலம் வே.கிருஷ்ணகுமார், ஸ்ரீபெரும்புதூர் ரவி, குன்றத்தூர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் போ.சந்திரசேகரன் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாராட்டலாமே!

News September 4, 2024

மதுவுக்கு கூடுதல் விலை வசூலித்தால் நடவடிக்கை

image

டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலித்து முறைகேடு செய்த பள்ளிக்கரணை, போரூர், குன்றத்துார், இ.சி.ஆர்., திருத்தணி, காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதி டாஸ்மாக் உரிமையாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.10க்கும் மேல் பணம் வாங்கிய 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.5,000 – ரூ.9,500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

காஞ்சியில் மூன்று இடங்களில் அதிமுக பொதுக்கூட்டம்

image

பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுமென கட்சி தலைமை அறிவித்திருந்தது. அதன்படி காஞ்சிபுரத்தில் 15-ஆம் தேதியும், உத்திரமேரூரில் 19-ஆம் தேதியும், குன்றத்தூரில் 22-ஆம் தேதியும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன்,முன்னாள் அமைச்சர் சின்னையா வரிசைப்படி பங்கேற்கவுள்ளனர்.

News September 3, 2024

கண் தானத்தில் உலகிலேயே 2வது இடத்தில் இந்தியா

image

உலக அளவில் கண் தானத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், மேலும் முதலிடத்தில் வர அதிக அளவில் கண் தானம் செய்ய வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது கண் தானம் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் பல்வேறு சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News September 3, 2024

அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதானை படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துளசிமதி, “இந்தப் போட்டியில் சீனாவின் யங்கை தோற்கடித்து தங்கம் வெல்வதே குறிக்கோளாக இருந்தது. அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்” என உறுதி கூறினார்.

News September 3, 2024

காஞ்சியில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த 33 கவுன்சிலர்கள் அறிஞர் அண்ணா கூட்டரங்கு நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 18 கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!