India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் கோப்பை 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பிரிவுகளுக்கு செப்டம்பர் 11 முதல் 23 வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலையின் வாயில் அமைர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொழிற் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (செப்.10) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மனுக்களாக தெரிவித்து பயன் பெறலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். அமைச்சரின் நேரடி ஆய்வில் மனுக்கள் பரிசீலக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். வந்தவாசியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த பைக்கும் வெண்குன்றம் கூட்டுச்சாலை அருகே மோதிக்கொண்டது. இதில் ஆகாஷ், விஜயன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை 2.8 செ.மீட்டராக பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட திக சார்பில் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் அன்று ஊர்வலம் நடத்துவது, 100 குடும்பங்களை சந்தித்து பேசுவது, திராவிடர் கழக தலைவர் தலைவர் கி.வீரமணி 92வது பிறந்தநாளை முன்னிட்டு கருஞ்சட்டை ஊர்வலம் நடத்தி மாபெரும் மாநாடு போல் தலைவர்களை அழைத்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். இந்நாளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவார். எனவே பொது மக்களுக்கான முகாம்கள் நல திட்ட உதவிகளை திங்கட்கிழமையில் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு (காஞ்சிபுரம்) திரும்பிய துளசிமதி முருகேசன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சொந்த ஊரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாகவும், சிறு வயதில் இருந்தே பெற்ற பயிற்சியும், தனது அப்பா கொடுத்த உற்சாகமும்தான் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார். மேலும், உடல் ஒத்துழைக்காததால் வெள்ளி பதக்கம் வென்றேன் அடுத்த பாராலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வெல்வேன் எனத் தெரிவித்தார்.
மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், கெருகம்பாக்கம் பி.டி.நகர், அண்ணாமலையார் தெரு பகுதியில் பர்னிச்சர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று அதிகாலை திடீரென பர்னிச்சர் நிறுவனத்தின் கிடங்கில், திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். இருப்பினும், ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி சாம்பலானது.
Sorry, no posts matched your criteria.