Kanchipuram

News September 10, 2024

வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம்

image

சுங்குவார்சத்திரம், சிவன்தாங்கல் பகுதியில் நாற்று நடும் பணி முடிந்து, பனப்பாக்கம் கிராமத்திற்கு லோடு வாகனத்தில் 16 பெண்கள், 12 ஆண்கள் என, 28 பேர் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் அருகே, ஏனாத்தூர் பகுதியில் வாகனம் வந்தபோது, வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதில், வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து. விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள், ஒரு ஆண்கள் என 11 பேர் படுகாயமடைந்தனர்.

News September 10, 2024

நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு

image

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில், அமைச்சர் காந்தி கூறியபடி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி 10 சதவீத கூலி உயர்வு அமலுக்கு வருவதாகவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கணக்கிட்டு கூலி உயர்வை வழங்க, கைத்தறி துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து பட்டு, பருத்தி கைத்தறி சங்கங்களுக்கும் சுற்றறிக்கையாக தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

News September 10, 2024

அமைச்சர் தலைமையில் இன்று மக்கள் குறைகேட்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்தில், இன்று காலை 10.30 மணிக்கு மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூடத்தில், அமைச்சர் அன்பரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இதில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

வி.ஏ.ஓ., வீட்டில் 51 சவரன் நகை, பணம் கொள்ளை

image

காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாவதி. வளையக்கரணை கிராமத்தில் வி.ஏ.ஓவாக இருக்கும் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 51 பவுன் நகை, ரூ.5,000 பணம், 500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்று வீடு திரும்பிய நிலையில், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 9, 2024

ஒரகடத்தில் அமைகிறது எச்.பி. கணினி ஆலை

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் ஆட்டோமொபைல் பூங்காவில், கணினி நிறுவனத்தின் முன்னணியாக விளங்கும் எச்.பி. கணினி நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமையவுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வின் வைபவிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், 1500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், இரண்டு ஆண்டுக்குள் 20 லட்சம் கணினி தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

அமைச்சர் தலைமையில் நாளை மக்கள் குறைகேட்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்தில், நாளை காலை 10.30 மணிக்கு மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூடத்தில், அமைச்சர் அன்பரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இதில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

459 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.46.67 கோடி கடன்

image

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 459 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46.67 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ ஏழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 9, 2024

5 வயது குழந்தை கிணத்தில் விழுந்து பலி

image

படப்பை அருகே உள்ள வடமேல்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(42). இவரது மனைவி கங்கா. இவர்களுக்கு 5 வயதில் புகழ் அழகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று காலை சுரேஷ் தங்களது தோட்டத்தில் மனைவியுடன் சாமந்திப்பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர்களுடன் குழந்தையும் பூ பறித்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதமாக குழந்தை அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.

News September 9, 2024

பரந்தூர் விமான நிலையத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக 5,368 ஏக்கர் பரப்பளவில் அமையப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வரும் நிலையில் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News September 9, 2024

வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பண பரிவர்த்தனை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து முதன்மை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் ரொக்கமாக பணம் செலுத்தி இடுபொருள் பெறுவதற்கு பதிலாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கையடக்க மின்னணு இயந்திரங்கள் இதன் மூலம் ரொக்கத் தொகை செலுத்தாமல் வங்கி அட்டைகள் மற்றும் க்யூ ஆர் கோடு மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!