Kanchipuram

News September 10, 2024

நாளை ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி

image

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேவலூர் குப்பம் ஊராட்சி, செட்டி பேடு பகுதியில் உள்ள அப்பல்லோ பொறியியல் கல்லூரியில், ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி நாளை (செப்.11) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

News September 10, 2024

ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

திருமுடிவாக்கத்தில், ‘சிட்கோ’ எனும் தமிழக அரசின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு தொழிற்பேட்டை உள்ளது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. சாலையில் தொடர்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உற்பத்தி செய்த பொருட்களை குறித்த காலத்தில் சந்தைக்கு அனுப்ப முடியாமல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, போக்குவரத்தை சீர் செய்து நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News September 10, 2024

சாம்சங் போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வி

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், இன்று 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிற்பகல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர், வரும் 13ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

News September 10, 2024

காஞ்சியில் ரூ.38.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்

image

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், சென்னைக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளாக ரூ.38.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் வரும் 30ஆம் தேதிக்குள் முடிவடையும் எனக் கூறினார்.

News September 10, 2024

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவாசத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல சாம்சங் தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இண்று இரண்டாவது நாளாகவும் தொழிற்சாலை வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 10, 2024

போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.7ஆம் தேதி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகருக்கு தினசரி வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 47 சிலைகள், மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டன. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க, போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

News September 10, 2024

இரு லாரிகள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், 2 லாரிகள் மோதி கொண்டு விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற லாரி மீது, மூட்டை ஏற்றிச் செல்லும் கனரக லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில், மூட்டை ஏற்றிச் சென்ற லாரியில் லிஃப்ட் கேட்டு சென்ற சாந்தி(50) என்ற பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 10, 2024

திருமுடிவாக்கத்தில் ரூ.47.63 கோடியில் உற்பத்தி பெருங்குழுமம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமுடிவாக்கம் பகுதியில் ரூ.47 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் உற்பத்தி பெருங்குழுமத்தின் முதல் பகுதியாக தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பக் கருவிகள் பரிசோதிக்கும் உயர்நுட்ப பரிசோதனை கூடம் செயல்படுத்தபடவுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார். இதனை தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

ரூ.666 கோடியில் நிறுவன விரிவாக்கத்தால்வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் உள்ள ராக்வெல் ஆட்டோமெஷன் நிறுவனம் தனது தொழிற்சாலையை ரூ.666 கோடியில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் அந்நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஒப்பந்தம் வையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 365 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

செப்டம்பர் 15ல் நிர்மலா சீதாராமன் வருகை

image

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சங்கர பல்கலைக்கழகத்தின் உள்ளே சங்கரா செவிலியர் கல்லூரி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தர உள்ளார். மத்திய அமைச்சர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!