Kanchipuram

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

அச்சமின்றி தர்ப்பூசணி பழத்தை சாப்பிடலாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் லட்சுமி, “தர்ப்பூசணியில் நிறத்திற்காக, ஊசி போடுவதாக வதந்தி எழுந்தது. காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்தபோது, இதுபோன்ற செயல்கள் எதுவும் நடக்கவில்லை. தர்ப்பூசணி பழங்களில், ‘லைக்கோபின்’ எனும் சிவப்பு நிறம் இயற்கையாகவே இருப்பதால், இனிப்பு மற்றும் நிறம் குறித்து, எவ்வித அச்சமும் இன்றி தர்ப்பூசணி பழத்தை பொதுமக்கள் வாங்கி சாப்பிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

சிறுமியை கொலை செய்த காதலன் கைது

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.

News April 5, 2025

காஞ்சிபுரத்தில் 197 அங்கன்வாடி பணியிடங்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 107 அங்கன்வாடி பணியாளர்கள், 11 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25-35 வயதுடைய பெண்கள்  <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.23-க்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். *நல்வ வாய்ப்பை மிஸ் பண்ணிறாதிங்க. ஆதரவற்ற பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும்

News April 5, 2025

பேருந்தில் ஊர் பெயர், எண் பதிக்க கோரிக்கை

image

அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் பின்பக்கம் உள்ள தடம் எண் மற்றும் ஊர் பெயர் பலகையை, பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை எனப்படுகிறது. எனவே, தடம் எண் மற்றும் ஊரின் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை சரியாக எழுத கோரிக்கை எழுந்துள்ளது.

News April 5, 2025

லைன் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் கம்பெனியில் லைன் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 10, 12, ITI, டிப்ளமே படித்த 18 – 25 வயது உடையவர்கள் வரும் மே 3ஆஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

படப்பையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் இன்று (ஏப்ரல் 5) கைது செய்தனர். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதாம் உசேன், பிரவீன் குமார், இம்ரான்கான் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என சலுகை முறையில் விற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News April 5, 2025

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

image

காஞ்சிபுரத்தில், 2024-25ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிங்களை பெற்று, மே 1ஆம் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

News April 5, 2025

மகாவீர் ஜெயந்தியன்று மதுபானக் கடைகள் மூட உத்தரவு

image

காஞ்சிபுரத்தில், வரும் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இது, தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1989 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

காதலியை கல்லால் அடித்து கொலை: ஒப்புக்கொண்ட காதலன்

image

ஸ்ரீபெரும்புதுார், கொளத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (24). இவர், கடந்த புதன்கிழமை கொளத்தூர் மயானம் அருகே கல்லால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விக்னேஸ்வரியின் காதலன் தீபன் (27) என்பவரை விசாரித்ததில், தன்னைத் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் விக்னேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது.

error: Content is protected !!