Kanchipuram

News March 26, 2025

மிக அதிவேக மெட்ரோ ரயில் சேவை குறித்து ஆய்வு

image

3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் மண்டலப் போக்குவரத்து (ஆர்ஆர்டிஎஸ்) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் ஆராயப்பட உள்ளது. அதன்படி சென்னை – செங்கல்பட்டு – விழுப்புரம் வழியாக 167 கி.மீ, சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் வழியாக 140 கி.மீ., கோவை – திருப்பூர் – சேலம் வழியாக 185 கி.மீ. தொலைவுக்கு மித அதிவேக ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது

News March 26, 2025

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை

image

காஞ்சிபுரம் ஏனைகரன் உள்ள நாராயணா பாளையம் தெருவில் அமைந்திருக்கும் கோயிலில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் இன்று மார்ச் 26 புதன்கிழமை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பக்தர்கள் ராமர் பாட்டை பாடி மகிழ்ந்தார்கள் அங்கு பிரசாதமாக கேசரி கொடுக்கப்பட்டது

News March 26, 2025

காஞ்சிபுரம்: இழந்த பொருளை மீட்டு தரும் அற்புத ஆலயம்

image

திருமால்பூரில் அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, திருமால் இழந்த தன் சக்ராயுதத்தையும், சந்திர பகவான் இழந்த தன் பொலிவையும் மீண்டும் அடைவதற்கு தவம் இருந்து, பலன் பெற்றனர். இங்கு வந்து சிவ தரிசனம் செய்து, சிவனாருக்கு தாமரைப்பூ, வில்வம், வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், இழந்ததை (பொருள், பதவி) விரைவில் பெறலாம் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க 

News March 26, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 26, 2025

திருமணம் செய்ய மறுப்பு: வீடியோவை வெளியிட்ட போலீஸ் 

image

மாங்காடு பகுதியில் வசிப்பவர் ஆனந்த் (38). கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரியும் இவருக்கு, ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் திருமணத்திற்கு மறுக்க, தன்னுடன் அந்த பெண் இருந்த புகைப்படம், வீடியோ பதிவுகளை பெண்ணின் உறவினர்களுக்கு ஆனந்தன் அனுப்பி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தனை நேற்று (மார்.25) கைது செய்தனர்.

News March 26, 2025

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

image

விருத்தாசலத்தில் இருந்து நேற்று (மார்.25) அதிகாலை லாரி ஒன்று வந்தவாசி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், எதிரே வந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45) சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.

News March 25, 2025

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 05 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் ஏப்ரல் 10 மாலை 05.45 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

ராஜினாமா கடிதம் அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

image

காஞ்சிபுரம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனுர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த தமிழமுதன் பதவி வகித்து வந்தார். ஆதனூர் ஊராட்சியில் கொருக்கந்தாங்கள், பள்ளஞ்சேரி, டி.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் நெருக்கடி கொடுப்பதாக கூறி தமிழ் அமுதன் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 25, 2025

321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.24) மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்தனர்.

News March 25, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!