India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பெரியார் பிறந்தநாளையொட்டி வரும் அக்.17ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. வைக்கம் வீரர், பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள், சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடைபெற உள்ளது. முதல் 3 இடங்களை பிடிப்போர்களுக்கு ₹5,000, ₹3,000, ₹2,000 வழங்கப்படும்.
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆலந்தூர் கத்திப்பாராவில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில், அவைத் தலைவர் த.துரைசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வருகிற செப்டம்பர் 28 அன்று காஞ்சியில் முதல்வர் தலைமையில் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில், அமைச்சர் அன்பரசன் தலைமையில் வரும் 21ஆம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், ASHOK LEYLAND, HYUNDAI, SUTHERLAND, FLEXTRONICS, TVS & MOTHERSON உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 044-27237124, 044-27238894 என்ற எண்ணில் அழைக்கலாம்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல எலக்ட்ரானிக் தொழிற்சாலையான சாம்சங் தொழிற்சாலையில், 10ஆவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?
2024-2025 ஆண்டிற்கான ‘திருக்குறள் முற்றோதல்’ போட்டியில், காஞ்சிபுரத்தில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
காஞ்சி அடுத்த எனாத்தூர் கால்நடை துறை பயிற்சி மையத்தில் (FTC), நாளை (வியாழக்கிழமை) வான்கோழி இனங்கள், தீவன மேலாண்மை, வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி முனைவர் பிரேம வள்ளி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். சுற்றுவட்டார விவசாயிகள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 88700 20916. ஷேர் பண்ணுங்க.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற, திமுக பவள விழா விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வரும் 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையான நாளை, காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்து உள்ளது
காஞ்சியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்.24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் அதிக வெப்பநிலை 2 டிகிரி முதல் 4டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்ககூடும்.
Sorry, no posts matched your criteria.