India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களை உள்ளடக்கிய பரந்தூர் பசுமை விமான நிலையம், சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் அமைக்க மாநில அரசு முடிவு செய்து அதற்கான நிலம் எடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தும் செயலை கண்டித்து ஏகனாபுரம் நெல்வாய் கிராமங்களில் வீடு தோறும் இன்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
சாம்சங் தொழிலாளர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என தொ.மு.ச.பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி.
கூறியுள்ளார். மேலும், பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்த்துவிட்டு, தீர்வு காண முயற்சிக்க வேண்டும். முதல்வரை தரம் தாழ்ந்து பேசுவது, விமர்சிப்பது பிரச்னைக்குத் தீர்வு ஆகாது. அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என சி.ஐ.டி.யு.க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் வரும் 16ஆம் தேதி உத்திரமேரூர் வட்டத்தில் நடைபெற உள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ.க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 16ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
இந்திய ஒன்றிய அரசு தனது இஸ்ரேல் ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகிக்க உள்ளார். இதில், காஞ்சிபுரத்தில் உள்ள எழுச்சி பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். பதிவு செய்து கொள்ள ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மீதும் சீல் வைக்கப்படும் என கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சுபுரம் மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் மற்றும் மாலை வேலை மிதமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இரவு நேரங்களிலும் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சியில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் அங்கு உள்ள மக்கள் மறுகுடியமர்வு செய்ய, இடம், பெயர் எனத் தேர்வு செய்யப்பட்ட 1,005 குடும்பத்தினரிடம், கல்வி, வேலை, படிப்பு உள்ளிட்ட விபரங்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.
சென்னையில் அக்டோபர் 15ம் தேதி 12-20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட்.
பரந்தூர், ஏகனாபுரத்தில் 2ஆவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 810 நாட்களாக கிராம மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழ்நாடு விவசாய சங்கம், பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் இணைந்து நெல்வாய், ஏகனாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவிக்கும் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.