Kanchipuram

News September 22, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 22, 2024

செப்.26ஆம் தேதி அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம்

image

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் செப்.26 ஆம் தேதி மாலை, 4:00 மணிக்கு அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு செப்.25க்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேலும் செப். 26ல் நடக்கும் குறைதீர் முகாமில் பங்கேற்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

News September 22, 2024

காஞ்சிபுரம் கண்காணிப்பு அலுவலர் நியமனம்

image

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ளவர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் டி.உமா நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 22, 2024

காஞ்சிபுரத்தில் 160 வருட விநாயகர் கோயில் இடிப்பு

image

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் கோட்டராம் பாளையம் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கடந்த ஆக.30 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கோவிலின் முன்பகுதி மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் ஐந்தடி அளவில் இடிதனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

News September 22, 2024

சங்குபாணி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி

image

காஞ்சிபுரம் அருள்மிகு சங்குபாணி விநாயகர் கோயிலில் நேற்று சங்கடஹர சதுத்தியை முன்னிட்டு, பக்தர்கள் விநாயகருக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி தந்து, பூஜையில் கலந்து கொண்டனர். விநாயகருக்கு அபிஷேக தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. பக்தர்கள் விநாயக பெருமானை, அருகம்புல் சாற்றியும் பிரதட்சிணம் வந்தும் தேங்காய் உடைத்தும் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

News September 21, 2024

மானிய விலையில் சோலார் பேனல் நிறுவ விண்ணபிக்கலாம்

image

பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட்  பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் மானிய விலையில், சோலார் பேனல்களை நிறுவுவதற்கு https://pmsuryaghar.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான செயல்முறைகளை pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம், மானிய விலையில் சோலார் பேனல் அமைத்து இலவசமாக மின்சாரம் பெறலாம்.

News September 21, 2024

வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர், கலெக்டர்

image

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இன்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தேர்வானவானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ எழிலரசன், மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News September 21, 2024

காஞ்சிபுரத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News September 20, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தில் பயனடையலாம். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புவோர் இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

காஞ்சிபுரம் அருகே கடைகள் அகற்றம்

image

காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் அருகில் உள்ள மாநகராட்சி இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிலர் ஆக்கிரமித்தனர். மக்களின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து, மடம் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடத்தை பொக்லைன் இயந்திரம் வாயிலாக, அங்கிருந்த கடைகளை இடித்து அகற்றினர்

error: Content is protected !!