India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்.28) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். டிப்ளமோ, ஐ.டி.ஐ, 10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 044-27237124. ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு, பொய்யா குளம், நாகலத்து மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தப் பகுதியில் குற்றவாளிகள் தங்கி இருப்பார்கள் என பட்டியல் எடுத்து, அந்தப் பகுதிக்கு போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருது நிம்மதியை தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செரப்பணஞ்சேரி அருகே ஸ்ரீ விமீஸ்வரர் சிவாலயத்தில் இன்று (மார்.,27) குருபிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கும் மூலவர் விமீஸ்வரருக்கும் பலவித அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடத்தி பக்தர்கள் அனைவரும் வழிபட்டனர். பின், நந்தி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி அறுகம்புல் மாலை சாற்றி வழிபட்டனர். மேலும், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்
படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலமங்கலம் நடுநிலைப்பள்ளியில் GKN நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட STEM LAB யை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் மாணவ மாணவிகளின் பெட்ரோல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்
படப்பை ஊராட்சி மேட்டு தெருவில் உள்ள அங்கன்வாடியில் சங்கரா கண் மருத்துவமனை மூலம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் என்று நடைபெற்றது ஒன்றி குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் படப்பை ஊராட்சி பொதுமக்கள் பலர் பயன்பட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களது பகுதியில் உள்ள நிறைகுறைகள் மற்றும் மக்கள் பிரச்சினை குறித்து விவாதம் மேற்கொண்டனர்.
காஞ்சி மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் வியாழன் (27 மார்) தண்ணீர் பந்தலை காஞ்சி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் திறந்து வைத்தார். அருகில் வாலாஜா பா. கணேசன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக கட்சி முன்னோடிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். திரளாகப் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.28) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்த உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யுங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று வெயில் சதமடிக்கும் என்றும், குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்.27) அல்லது நாளை (மார்.28) அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவும் வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஆகையால், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
Sorry, no posts matched your criteria.