India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <
காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதில் சுணுக்கம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நெசவாளர்களின் கூலி உயர்வு இல்லை. தனியார் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி விவகாரத்தில், வரையறை இல்லை. மழைக்காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் பெறும் திட்டத்தில் அலைக்கழிப்பு, கழிவுத்தொகை, 200 ரூபாயாகவே பல ஆண்டுகளாக தொடர்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (ஏப்ரல் 7) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தனது மகளுடன் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர், போலி ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை அபகரிப்பதாக மனு கொடுக்க வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் மூதாட்டியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அங்காளபரமேஸ்வரி கோவில்-உத்திரமேரூர், பிடாரிவிளக்காத்தம்மன் கோவில்-அஞ்சுர், முத்தாலம்மன் கோவில்-சிறுமாங்காடு, கனகதுர்க்கையம்மன் கோவில்-கோனேரிகுப்பம், தீப்பாஞ்சீயம்மன் கோவில்-காஞ்சி, பஜனை பொன்னியம்மன் கோவில்-ஈசுர், அஞ்சுரம்மன் கோவில்-பாக்கம், முத்துகோலாட்சியம்மன் கோவில்-புத்தகரம், கந்தபொன்னியம்மன் கோவில்-தும்பவனம், ஆகாயகன்னியம்மன் கோவில்-பிள்ளயைார் பாளையம். *கண்டிப்பாக போங்க. நண்பர்களுக்கு பகிரவும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 107 அங்கன்வாடி பணியாளர், 11 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
காஞ்சிபுரம், தயாா்குளம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று (ஏப்ரல் 6) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஆரநேரி அரசு பள்ளி அருகே நேற்று (ஏப்ரல் 6) கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்ததில், உ.பி.,யைச் சேர்ந்த சின்டூ (27) என்பவர், கேரளாவைச் சேர்ந்த அபுஷாகீர் (37) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, அபுஷாகீர் (37), மம்தாஜ் பாபி (49), பிஷ்வஜீத் (30), ஷிபு (24), சின்டூ (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
காஞ்சி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-044 – 27237424, 27237425, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091, BSNL-1500, டெங்கு காய்ச்சல் உதவி-8098160003, பேரிடர் மீட்பு-04177 -246269, 9442105169. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்
காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு தொடர் வைப்பு கணக்கு, பொன்மகன் வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், பல வித அஞ்சல் கணக்குகள் தொடங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் காஞ்சிபுரம் கோட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் மாலை 6 மணிக்கு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்து வருகிறார். 7ஆம் நாள் விழாவான நேற்று முன்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் வளாகம் பக்தர்களால் களைகட்டியது.
Sorry, no posts matched your criteria.