India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023-24ஆம் ஆண்டுக்கான சிறந்த பட்டு நெசவாளர்களாக, காஞ்சிபுரம் பட்டு நெசவாளர் சங்க உறுப்பினர்கள் தேர்வானார்கள். அவர்களுக்கு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று விருது வழங்கினார். முதல் பரிசு ரூ.5 லட்சம் டி.சந்திரசேகரனுக்கும், 2ஆம் பரிசு ரூ.3 லட்சம் குமரேசனுக்கும், 3ஆம் பரிசு ரூ.2 லட்சம் புகழேந்திக்கும் வழங்கினார். பட்டு தொழிலில் சிறந்து விளங்கும் காஞ்சிபுரத்திற்கு இது பெருமை சேர்த்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நாளை (செப்.27) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 5 மணி வரை நெல்வாய், அருணாசலபிள்ளைசத்திரம், கட்டியாம்பந்தல், ரெட்டமங்கலம், வளத்தோடு, வின்னமங்கலம், தோட்டநாவல், வாடாதவூர், சின்னாலம்பாடி, அமராவதிபட்டினம், கரிக்கிலி, மங்கலம், சித்தாமூர், சடச்சிவாக்கம், பெருங்கோழி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வரும் 28ஆம் தேதி சைக்கிள் போட்டியும், 29ஆம் தேதி மாராத்தான் போட்டியும் நடைபெறும் என மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இரு போட்டிகளும் நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து மேற்படிப்பு படிக்காத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி, கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் கலைச்செல்வி கலந்து கொண்டு, “உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி கல்வி அதிகாரிகள், திறன் மேம்பாட்டு கழகத்தினர் தெரிவிக்கும் ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெற்று வாழ்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்.. அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும்” என்றார்.
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதானவர்கள் மீது போலீசார் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன. குற்றம் சாட்டப்படும் எவரையும் முறையாக விசாரித்து தண்டணை பெற்றுத்தர வேண்டும். காவல்துறையே நீதிபரிபாலனத்தை கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையது அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டத்தில் வி.சி.க. பங்கேற்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றும், எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல, 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்தும் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மழை பெய்தது. ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த துளசிமதி, பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் வென்ற வீராங்கனை நேரில் அழைத்து பாராட்டி ரூ.2 கோடி காசோலை வழங்கி கௌரவித்தார். உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.
சோமங்கலம் – நல்லூர் சாலையில், நேற்றிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாகனத்தை மடக்கி ஆய்வு செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மூட்டை மூட்டையாக இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கணேஷ், காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். 150 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் வெளியேறி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அவற்றை சரி செய்ய 250 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசிடம், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. அந்த நிதியை அரசு ஒதுக்கீடு செய்தால், பாதாள சாக்கடை பிரச்னைகளை முழுமையாக சரி செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் நரேந்திரன் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.