Kanchipuram

News October 8, 2024

சாம்சங் விவகாரத்தில் நாளை முடிவு தெரியும் – அமைச்சர் அன்பரசன்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. நாளை முடிவு தெரியும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

News October 7, 2024

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

image

மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற (அக்.6) விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.7) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வெளியே செல்லும் மக்கள் குடையை எடுத்துச் செல்லுங்கள்.

News October 7, 2024

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம் முடிவுக்கு வருமா?

image

காஞ்சிபுரம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் நிறுவன மேலாளா்களுடன் நேற்று தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தினோம். சாம்சங் நிா்வாகத்தினரும் அவா்களின் ஊழியா்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவாா்கள் என உறுதியுடன் நம்புவதாக தெரிவித்துள்ளாா்.

News October 6, 2024

முதல்வர் கோப்பை; கால்பந்தில் காஞ்சிபுரம் முன்னேற்றம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டி சென்னை , கோவை,மதுரை, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி,திருப்பூர்,மதுரை,திருச்சி மாவட்ட அணிகள் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றிக்கு தகுதி பெற்றுள்ளன.

News October 6, 2024

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வைகோ கருத்து

image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4ஆவது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதில், தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கையான சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News October 6, 2024

நாளை முதல் அஞ்சல் வார விழா

image

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாளை முதல் அஞ்சல் வார விழா தொடங்க உள்ளது. நாளை (அக்.7) தபால் தினம், நாளை மறுதினம் (அக்.8) தபால் தலைகள் தினம், அக்.9ஆம் தேதி சர்வதேச தபால் தினம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்தார். இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

மர்ம மரணம்: உறவினரே கொலை செய்தது அம்பலம்

image

உத்திரமேரூர் அருகே உள்ள ஒட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளன. இவர், மாங்கல் பகுதி சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி காட்டுப்பாக்கம் சாலையில், இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரணையில் சொத்து தகராறு காரணமாக அவரது பெரியப்பா கூலி படையை வைத்து முருகனை கொலை செய்தது தெரிந்தது.

News October 6, 2024

அக்டோபர் 17 பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி காஞ்சிபுரத்தில் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் பொது கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News October 6, 2024

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம்

image

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!