Kanchipuram

News October 25, 2024

நாளை காஞ்சிபுரத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமி

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, காஞ்சிபுரத்தில் நாளை (அக்.26) நடைபெறும் 53ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். காஞ்சிபுரம் காந்தி சாலையில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமை வகிக்கிறாா். இதில் அதிமுக கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.

News October 25, 2024

இயற்கை எரிவாயு விநியோகம்: 8 மையங்கள் அமைக்க முடிவு

image

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலை, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிக்கு, ‘ஏ.ஜி அண்டு பி பிரதம்’ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் தற்போது 42 மையங்கள் வாயிலாக, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. வரும் டிசம்பருக்குள் கூடுதலாக 8 மையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன என அந்த நிறுவன தலைமை அதிகாரி கூறினார்.

News October 25, 2024

காதலன் பிரிந்ததால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

image

மாங்காடு அருகே உள்ள மௌலிவாக்கம் பகுதியைச் சேர்த்தவர் கரண் (21). இவருடன் பல்லாவரத்தைச் சேர்ந்த இசை (24), என்கின்ற திருநங்கை வசித்து வந்துள்ளர். இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால், கரண் பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த இசை நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து  வந்த மாங்காடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News October 25, 2024

கொள்முதல் விலை உயர்வால் முட்டை விலை உயர்ந்தது

image

ஈரோடு, சித்தூர், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் முட்டை, காஞ்சிபுரத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படுகிறது. கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் 1 முட்டை விலை 5 ரூபாய் 30 காசாக இருந்தது. இந்நிலையில், பண்ணைகளில் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, முட்டை ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து, நேற்று ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க

News October 25, 2024

விபத்து ஏற்படாமல் தீபாவளி கொண்டாடுங்கள்: கலெக்டர்

image

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள், அமைதி காக்க கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், குடிசை மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். விபத்து ஏற்படாமல் தீபாவளி கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 25, 2024

மருது சகோதரர்களின் நினைவு மண்டபத்தில் எம்.எல்.ஏ மரியாதை

image

விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி நேற்று (24.10.2024) அவர்களின் திருப்பத்தூரில் உள்ள அவர்களின் நினைவு மண்டபத்தில் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து, மலர் மரியாதை செய்தார். நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News October 25, 2024

300 கி.மீ நீள அடிநிலை குழாய்களில் இயற்கை எரிவாயு வழங்கல்

image

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் AG&P பிரதம் நிறுவனம் சுமார் 300 கி.மீ அளவில் அடிநிலத்துக்கு இயற்கை எரிவாயு குழாய்களை பதிந்து, வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிவாயு வழங்கி வருகிறது. இது மூலம் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்பட உள்ளது. 4600 வீடுகள் PNG-க்கு மாறியுள்ளதுடன், வாகனங்கள் CNG-யை பயன்படுத்தி வருகின்றன.

News October 25, 2024

வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து தொடங்கியது

image

வேடந்தாங்கலில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில் பறவைகள் காணப்படுகின்றன. கொத்தி நாரை, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேல் பறவை இனங்கள் சரணாலயத்தில் வந்துள்ள நிலையில் FTC மூலம் விவசாயிகளுக்கு களப் பயிற்சிகள் அளிக்கவும் சரணாலயத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்ய அரசு அதிகாரிகள் ஆவணங்கள் செய்ய வேண்டும் என்று உத்திரமேரூர் விவசாயிகள் கூறுகின்றனர்.

News October 24, 2024

காஞ்சிபுரத்தில் தொழிலை வளர்க்க கடன் – ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ) மூலம், கலைஞர் கடனுதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை, கடன் வழங்கப்பட உள்ளது. தகுதி: வயது 18-65. புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், இந்த 044-27223562 எண்ணை தொடர்பு கொண்டு கடனுதவி திட்டத்தில் பயனடையுமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

7 ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்களுக்கு இடமாற்றம்

image

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்களுக்கு, இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, பாபு செங்கல்பட்டில் இருந்து திருப்பத்தூர், செந்தில்குமார் திருவள்ளூரில் இருந்து ராணிப்பேட்டை, தணிகாசலம் கடலூரிலிருந்து செங்கல்பட்டு, கவிதா மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

error: Content is protected !!