Kanchipuram

News August 10, 2025

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் 3/3

image

வரும் 17ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் செல்லும். இது, நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். வரும் 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக நாகர்கோயில் செல்லும். <<17359000>>தொடர்ச்சி<<>>

News August 10, 2025

காஞ்சிபுரத்தில் டிகிரி இருந்தால் லட்சத்தில் சம்பளம்

image

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்

News August 10, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

காஞ்சிபுரம்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

காஞ்சிபுரம் இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்.<<>> நல்ல சம்பளத்தில் IT துறையில் வேலை வேண்டும் நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

காஞ்சிபுரம் வருகை தரும் துணை முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆக.13-ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தரவுள்ளார். அப்போது, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350652>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆலப்பாக்கம், உத்திரமேரூரில் உள்ள சிறுபினாயூர், வாலாஜாபாத்தில் உள்ள உள்ளாவூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தண்டலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாமானது நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17349015>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்றவற்றை செய்யலாம். அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (காஞ்சிபுரம் – 044-27237424, 044-27222776, ஸ்ரீபெரும்புதூர் – 044-27162231, உத்திரமேரூர் – 044-27272230) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

காஞ்சிபுரத்தில் இனி இது இருக்காது!

image

மத்திய அரசின், ‘ஆப்பரேஷன் ஸ்மைல்’ திட்டத்தின் மூலமாக பிச்சை எடுப்போர் இல்லாத நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற திட்டமிடப்படப்பட்டுள்ளது. கோயில் வாசல்கள், சிக்னல்கள், பிரபலமான கடைகளின் வாசல்களில் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதால் பக்தர்கள், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைகின்றனர். இத்திட்டத்தில், அவர்களுக்கு திறன் பயிற்சி, காப்பகத்தில் தங்குமிடம், வியாபாரம் செய்ய உதவி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

error: Content is protected !!