Kanchipuram

News October 8, 2024

ரூ.14,575 கோடியில் 2 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள்

image

தலைமைச் செயலகத்தில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.8) நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசாண் நிறுவனம் ரூ.13180 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கும் கேன்ஸ் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ.1395 கோடி முதலீட்டில், 1033 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது. இவை உட்பட 7 நிறுவனங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News October 8, 2024

21ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

image

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம், கடந்த 9ஆம் தேதி தொடங்கு தினமும் நடைபெற்று வருகிறது. பலதரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு, தொடர் போராட்டம் தோல்வியடைந்து வரும் நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி.

image

காஞ்சிபுரத்தில் உள்ள மேட்டுத் தெரு, நெல்லுக்காரத் தெரு, ராஜாஜி மார்க்கெட் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. தற்போது, செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. மேலும், சட்டம், ஒழுங்கிற்கும் பிரச்னையாக உள்ளதால், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

மாவட்ட பொறுப்பு அமைச்சராக காந்தி நியமனம்

image

தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், இதர பணிகளை கண்காணித்திடவும் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்த அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை சீற்றம், நோய்த் தொற்று அபாயம், அவசரக் கால பணிகளை கூடுதலாக செய்திட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து: 5 பேர் காயம்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில்,ம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வழக்கம் போல் போராட்டத்துக்கு சென்ற சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 5 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சக ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News October 8, 2024

மருத்துவமனையில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

image

ஸ்ரீபெரும்புதுார் சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பழனி (60) – மனைவி அலமேலு (45) தம்பதியினரின் 4 வயது மகன் ருத்ர பிரசாத், தலையில் எலும்பு வீக்கம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். நேற்று முன்தினம் வார்டில் தாவி குதித்து, விளையாடியபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

News October 8, 2024

1 கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை

image

ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் தக்காளி காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் ஆந்திராவில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் 1 கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

News October 8, 2024

அமைச்சர் அன்பரசன் தலைமையிலான கூட்டம் ரத்து

image

காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் மாதந்தோறும் 2 செவ்வாய்க்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுவதால், அமைச்சர் குறைதீர் கூட்டம் நடைபெறாது என்றும், வரும் 15ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேர் பண்ணுங்க

News October 8, 2024

அரசு பேருந்து மோதி தாய், மகன் பலி

image

சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (32). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை – ஒரகடம் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில், ஜெயஸ்ரீ மற்றும் அவரது மகன் ஆலன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News October 8, 2024

“பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை”

image

சென்னையில் நேற்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சிஐடியு சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். அப்போது, “சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக |அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்கள், நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!