Kanchipuram

News October 9, 2024

சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

இ.டி.ஐ.ஐ. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்”, என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. அகமதாபாத் பாடத் திட்டத்தை தீர்மானிக்கும், பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இந்த வகுப்புகள் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தொடங்குகிறது.

News October 9, 2024

சுற்றுலா பேருந்து – பைக் மோதி விபத்து: ஒருவர் பலி

image

நெமிலி, சிறுணமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (25). இவர், பைக்கில் தனது நண்பர் அய்யப்பனுடன் நேற்று முன்தினம் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கன்னியம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா பேருந்து அவர் மீது மோதியது. இதில், அன்பழகன், அய்யப்பன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்பழகன் நேற்று உயிரிழந்தார்.

News October 9, 2024

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், வரும் 13ஆம் தேதி ஆலந்தூரில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் 29ஆம் தேதி அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டவுடன், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

தொழில் முனைவோர் மேம்பாட்டு படிப்பில் சேரலாம்

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொடங்க உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு, இடிஐஐ தலைமை அலுவலக எண்களில் (8668107552, 8668101638, 9677835172) தொடர்பு கொள்ளலாம். அனைத்து விவரங்களை இந்த https://www.editn.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 9, 2024

இதனால் ஊதியம் பாதிக்கப்படும்: அமைச்சர்

image

தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, “சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. எதற்காக போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை? இதனால் அவர்கள் ஊதியம் பாதிக்கப்படும். பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார்.

News October 9, 2024

நவராத்திரி 2024 விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன்

image

காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லூரியில் ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நவராத்திரி 2024 விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். மேலும் நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கு இசைக்கருவிகள் வழங்கினார்

News October 9, 2024

செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

image

காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே கரும்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி அருகே ஆவின் டீ கடை நடத்தி வருகிறார். இங்கு டீ குடித்த 5 பேர், கடையில் வேலை செய்து வரும் ஜிதேந்தர் மண்டல் என்பவருடைய செல்போனை நேற்று அதிகாலை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

News October 8, 2024

காஞ்சிபுரம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான திமுக தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில், வட கிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

நியாய விலை கடை பணியாளர்கள் விண்ணப்பம் வரவேற்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 35 விற்பனையாளர் மற்றும் 16 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.drbkpm.in என்ற இணையதளத்தில் 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயஶ்ரீ அறிவித்துள்ளார்.

News October 8, 2024

வழக்கு உள்ளதால் தொழிற்சங்கம் அமைப்பதில் சிக்கல்

image

ஸ்ரீ பெரும்பதூர் சாம்சங் தொழிற்சாலை போராட்டத்தில் தீர்வு காணும் முயற்சி மேற்கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போராட்டம் குறித்து பேசிய போது, “ஊழியர்கள் பிரச்னையை முதல் நாளிலிருந்து முதல்வர் கவனித்து வருகிறார். தொழிற்சங்கம் அமைக்க வழக்கு நிலுவையில் உள்ளதால் அதில் தலையிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் முடிவு செய்யப்படும். எனவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!