Kanchipuram

News October 10, 2024

புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா

image

பரணிபுத்தூர், மாங்காடு சாலையில் உள்ள சக்தி பேலஸ் மண்டபத்தில், புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பாராளுமன்ற, உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பொதுமக்கள் பலருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

News October 10, 2024

தேவரியம்பாக்கம் தலைமை ஆசிரியருக்கு பதவி உயர்வு

image

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறையால் 45 தலைமை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த சி.ஏழில் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

News October 10, 2024

சுமுகத் தீர்வு காண வேண்டும்: ந்தியத் தொழில் கூட்டமைப்பு

image

சாம்சங் தொழிலாளர் விவகாரத்தில், சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும், தொழிலாளர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்காத வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு தொழில் துறைக்கு உகந்த மாநிலம் என்ற நற்பெயர் தொடர வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

News October 10, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

7ஆம் நூற்றாண்டின் முருகர் சிலை கண்டெடுப்பு

image

ஒழுக்கோல்பட்டு கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவில் அருகே, பழமை வாய்ந்த சிலை சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை, தலை கூம்பு வடிவில் உள்ளது. கரந்த மகுட கவசம் மற்றும் முகம், காது ஆகிய பகுதிகளில், ஆபரணங்கள் அணியப்பட்டு உள்ளன. இது, 7ஆம் நூற்றாண்டின் முருகர் சிலை என வரலாற்று மத்திய தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

News October 10, 2024

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்டம்

image

காஞ்சிபுரம் அடுத்த மேல் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை, காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.

News October 9, 2024

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை

image

தொடர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News October 9, 2024

கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

image

காஞ்சி எனாத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு கால்நடை துறை பயிற்சி மையத்தில் நாளை (10.10.2024) காலை 11 மணிக்கு ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றி முனைவர் Dr பிரேம வள்ளி, பயிற்சி அளிக்க உள்ளார். இதில் காடை வகைகள், அதன் வளர்ப்பு முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் ஆகியவை தொடர்பாக ஆலோசனைகளை வழங்க உள்ளார். வேளாண் பெருமக்கள், பொதுமக்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News October 9, 2024

போலீசார்- சாம்சங் ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு

image

சங்கார்ச்சத்திரம் அருகே இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை பந்தல் அகற்றப்பட்ட போதிலும், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது, இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

News October 9, 2024

சாம்சங் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கைது

image

சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்ட பந்தல் அகற்றப்பட்ட போதிலும், போராட்டம் நடத்தி வருவதால் போலீசார் வலுக்கட்டாயமாக ஊழியர்களை கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!