India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தமிழகத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். நாளை காஞ்சிபுரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசின் முயற்சியால் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றது. சாம்சங் விவகாரத்தில் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 24.40 மி.மீ, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10.40 மி.மீ, வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் 22 மி.மீ, ஶ்ரீபெரும்பத்தூர் பகுதிகளில் 35.20 மி.மீ, குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 63.30 மி.மீ, செம்பரம்பாக்கம் பகுதிகளில் 70 மி.மீ என மொத்தம் 23.43 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. சராசரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.90 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக நீர்பெருக்கு அதிகரிக்கும்போது பாம்பு மற்றும் இதர வன உயிரினங்கள் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் 24 மணி நேரமும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் நாளை (அக். 16) இயங்காது என அறிவிக்கப்ட்டுள்ளது. இதில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழில் அமைதி, பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்;
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது; தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீது நிர்வாகம் எழுத்துப் பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன் தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழா முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 17ஆம் தேதி பொது கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் பலத்த மழை இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளதால் 17ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் இன்று முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த நிலையில் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பகுதியிலும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு நாளை (16.10.2024) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது
அதிகனமழை காரணமாக நாளை புதன் கிழமை (16.10.2024) அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2 நாட்கள் கழித்து 18ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறையத் தொடங்கிவிடும் என்று தென்மண்டல் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.