Kanchipuram

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

image

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். <>உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள்.<<>> ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் 10th, ITI படித்தவர்களுக்கு வேலை

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் முதல் மனைவி கொடூர கொலை!

image

வாலாஜாபாத்தை சேர்ந்த மதன் தனது 2ஆவது மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்தார். அண்மையில், முதல் மனைவி லைலா குமாரி உடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மதன் – சுகன்யா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. லைலா குமாரி தன்னை வசியம் செய்ததாக நினைத்து, அவரை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவர, சரணடைந்தார்.

News August 11, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.11) பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். மேலும், SHARE பண்ணுங்க.

News August 11, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

காஞ்சிபுரம்: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட்.25ம் தேதி கடைசி ஆகும். நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 10, 2025

காஞ்சி: நகை தொழில் செய்ய ஆசையா?

image

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள்<> கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9543773337, 9360221280 எண்ணை அழைக்கவும். இப்பயிற்சி முடித்தால் வங்கிகளில் வேலை, நகைக்கடை, நகை அடகு கடை வைப்பது போன்ற தொழில்களுக்கு உதவியாக இருக்கும்.

News August 10, 2025

திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

image

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டம் முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சாலவாக்கம் ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இன்று (10.08.2025) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

News August 10, 2025

வாரயிறுதி விடுமுறை: காஞ்சிபுரம் மக்களுக்கு குட்-நியூஸ்

image

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358989>>தொடர்ச்சி<<>>

News August 10, 2025

எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

image

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358984>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!