Kanchipuram

News April 15, 2025

காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா?

image

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.

News April 14, 2025

சமத்துவ நாள் விழாவில் ரூ24.80 கோடி நலத்திட்ட உதவிகள்

image

இன்று (14-4-25)காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 1181 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு 24.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தார்.

News April 14, 2025

திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

நாய் கடிக்கு சிகிக்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு

image

ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் விஷ்வா (13). கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விஷ்வாவை தெரு நாய் கடித்தது. இதில் வலது கையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அதிகமான தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் விஷ்வா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

காஞ்சிபுரத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட கூட்டமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-25ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 15-30 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- குமரக்கோட்டம் முருகன் கோயில் போங்க

image

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் உள்ள ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2025

ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

கொலை வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி, ரவுடி வசூல் ராஜா 34, என்பவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட சுரேஷ்(19) மற்றும் ஜாகீர்உசேன்(25) ஆகிய இருவரையும், எஸ்.பி.,சண்முகம், பரிந்துரை படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News April 13, 2025

காஞ்சிபுரத்தில் உதயமாகும் இரு பிர்காக்கள்

image

சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவித்தது. காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, இரண்டு பிர்கா உருவாக்க, வருவாய் துறையினர், கருத்துரு அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பிர்காவை பிரிக்க வருவாய் துறையினர் நீண்ட நாட்களாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

News April 12, 2025

காஞ்சி மாவட்டத்தின் புள்ளி விவரம் தெரிய வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள்தொகை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம், சமூக நலத்திட்டங்கள் பற்றி விரிவாக தெரியவேண்டுமா?. அரசு உதவிகளை பெறும் வழிமுறைகள், விவசாய நிலங்கள், பயிர்கள், தொழில் வாய்ப்புகள், சுற்றுலா இடங்கள் போன்றவை பற்றியும் தெரியவேண்டுமா? அப்படியென்றால் <>இதை கிளிக் செய்யுங்கள்<<>>. அதில் வரும் PDF-ஐ டவுன்லோட் செய்யுங்கள் கண்டிப்பாக பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

error: Content is protected !!