Kanchipuram

News November 16, 2025

காஞ்சிபுரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

காஞ்சிபுரம் மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1353 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE IT

News November 16, 2025

காஞ்சிபுரம்: நாக தோஷம் விலக இங்கு போங்க!

image

காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் குமரகோட்டம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை போற்றியே கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றினார் என்பது சிறப்பாகும். இக்கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால், திருமணத்தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம். (SHARE)

News November 16, 2025

காஞ்சி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

காஞ்சி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, நாளை முதல் வருகிற டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

காஞ்சிபுரம்: ரூ.18,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் Sharda Motor Industries Ltd நிறுவனத்தில் Assembly, Quality பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.17,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்த முன் அனுபவமும் தேவையில்லை. 18-34 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவ.16ம் தேதிக்குள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

காஞ்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவம்பர் 17) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 16, 2025

காஞ்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

காஞ்சி: கடன் பிரச்னை; கொள்ளையனாக மாறிய வாலிபர்!

image

குன்றத்தூர், இரண்டாம் கட்டளை கஜலட்சுமி நகரை சேர்ந்தவ கௌசல்யா (70) இரண்டு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றார். அப்போது இவரிடம் வழி கேட்பது போல நடித்து, 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் படப்பையை சேர்ந்த பிரதீப்பை (31) கைது செய்தனர். அவருக்கு கடன் பிரச்னை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

News November 16, 2025

காஞ்சியில் கனமழை வெளுக்கும்!

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.

News November 16, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!