Kanchipuram

News November 14, 2025

குன்றத்தூரில் துணை மின் நிலையத்தை திறந்த அமைச்சர்

image

இன்று (நவ.14) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உள்ளனர்.

News November 14, 2025

காஞ்சிபுரம்:லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

News November 14, 2025

காஞ்சி: கார் ஷோ ரூமுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு!

image

காஞ்சி, வெள்ளைகேட் அருகில் தனியார் கார் ஷோரூம் செயல்படுகிறது. நேற்று யாரும் எதிர்பாராத வகையில் பாம்பு ஒன்று ஷோரூமில் புகுந்து விட்டது. இதை கவனித்த பணியாளர்கள் பாம்பை விரட்ட முயன்றனர். பாம்பு, கார் உதிரிபாகங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்று பதுங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 6 அடி நீளமுள்ள பாம்பை மீட்டு, வனத்திற்குள் விட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

News November 14, 2025

காஞ்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

காஞ்சி: வாடகை வீட்டில் பாலியல் தொழில்!

image

காஞ்சி, மணிமங்கலம், வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள குடியிருப்பு ஒன்றில், மசாஜ் சென்டர் பெயரில், பாலியல் தொழில் நடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்ததில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். 3 பெண்களை மீட்டு, பாலியல் தொழில் நடத்தி வந்த பிரசாந், சபரீஷை போலீஸ் கைது செய்தனர்.

News November 14, 2025

காஞ்சி: ரயில்வேயில் வேலை, ரூ.30,000 சம்பளம்!

image

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு, கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.

News November 14, 2025

காஞ்சி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 14, 2025

காஞ்சி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

காஞ்சி: நகைக்காக மூதாட்டி கொலை?

image

சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராணி. கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் NH-ல் சுண்டல், வேர்க்கடலை விற்று வந்தார். இந்த நிலையில், நேற்று (நவ.13) ராணி நெடுஞ்சாலை அருகேயுள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நகைக்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 14, 2025

காஞ்சிபுரத்தில் 30,644 பேருக்கு இலவச பட்டா!

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் களக்காட்டூர் கிராமத்தில் 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில், 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி செலவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில், MP க.செல்வம், க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!