India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா செப்.,15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
▶1949 செப்டம்பர் 17ல் திமுக-வை ஆரம்பித்த இவர், 1957-ல் காஞ்சிபுரத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். ▶1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ▶1967ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார். ▶1969ல் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.
அண்ணா கொண்டு வந்த முக்கியமான திட்டங்களை கமெண்டில் சொல்லிட்டு போங்க!
குன்றத்தூர் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், B.L.A.2, B.D.A ஆலாசனைக் கூட்டம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் பணியினை நடத்தி முடித்த நிர்வாகிகள் 600 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் லோக் ஆயுக்தா சமரச தீர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 577 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.7 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 325 இழப்பீடு தொகையை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ (அ) அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்கள் ஆலோசனைகளை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
காஞ்சிபுரம் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews,Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது சைபர் <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் செப்டம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.