India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, குறிப்பாக கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க தற்காலிக உரிமை தேவைப்படுபவர்கள் 19.10.2024 இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி உரிமை இல்லாமல் பட்டாசு கடை வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
சின்னசேலம் அருகே தகரை காப்புக்காடு வனப்பகுதியில் அடி பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை என்பதனால் அடி பெருமாள் கோவிலில் உள்ள அடி பெருமாள் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பீரமாக நின்றபடி காட்சியளித்தார். இதை சின்னசேலம் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்கோட்ட பகுதிகளில் உள்ள கிராமமக்கள் தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் விளையாடவோ, குளிக்கவோ செல்லாதவாறு, கண்காணித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருக்கோவிலூர் காவல் துணைக் காண்பிப்பார் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் கோவையைச் சேர்ந்த ரகுராமன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ரகுராமன் உங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து புண்ணியமூர்த்தி போலீசாரில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அக்.15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மக்களே வெளியே செல்லும் முன் கவனமாக இருங்கள். குடை எடுத்துச் செல்லுங்கள்.
தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் சசிகுமார் இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் இன்று கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட அளவில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், வரும் அக்.31-க்குள் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.60 முதல் ரூ.62 என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.8 உயர்ந்து ரூ.70 உயர்ந்துள்ளது. இந்த விலை ரூ.100-ஐ தாண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.