India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (24.13.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
உளுந்தூர்பேட்டை-விருதாச்சலம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு கனமழையால் கட்டிட சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் நகர மன்ற தலைவர் கே. திருநாவுக்கரசு மற்றும் ஆணையர் ஆகியோர் உடன் இருந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பூ.மலையனூர்-நொனையவாடி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இஆப, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 474 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று வருவாய்த்துறை காவல்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனுக்களும் பொதுமக்களிடமிருந்து 462 மனுக்களும் என மொத்தமாக 474 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி சந்தையில் இன்றைய(டிச 23) காய்கறி விலை. தக்காளி ரூ.24, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்யில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய போது, ‘விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது தான் கள்ளக்குறிச்சியில் சோக சம்பவம் நடந்தது. கொழுத்து போய் விஷச்சாராயம் குடித்துவிட்டு செத்தார்கள் எனவும், எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.