Kallakurichi

News August 13, 2025

விலாசம் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

image

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்திரை தனது விவசாய நிலத்தில் மாட்டு சாணம் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது, விலாசம் கேட்பது போல் நடித்து அவரிடம் இருந்து 7 சவரன் தாலிச் சங்கிலியை 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

News August 12, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள் மூடல்

image

தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை குறைவால், ஒரு மாணவர் கூட இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஆறு பள்ளிகள் மூடப்பட இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தக் அறிவிப்பால் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு 32 பள்ளிகள் கள்ளக்குறிச்சியில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2025

கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிப்பு

image

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே கள்ளக்குறிச்சி நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT

News August 12, 2025

கள்ளக்குறிச்சி மக்களே கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

image

▶️நகராட்சி- 3 (கள்ளக்குறிச்சி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டை)
▶️பேரூராட்சிகள்- 5
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-7
▶️வருவாய் குறுவட்டம்- 34
▶️வருவாய் கிராமங்கள்-562
▶️ஊராட்சி ஒன்றியம்-9
▶️கிராம பஞ்சாயத்து-412
▶️MP தொகுதி-1 (கள்ளக்குறிச்சி)
▶️MLA தொகுதி- 4
▶️மொத்த பரப்பளவு – 3529.67 ச.கி.மீ
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News August 12, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் காரி பாரி மண்டபம், உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் காட்டுசெல்லூர் திறந்த வெளி மைதானம், சின்னசேலம் வட்டாரத்தில் தொட்டியம் டிசிஆர் மஹால், சங்கராபுரம் வட்டாரத்தில் விரியூர் திறந்த வெளி மைதானம், திருநாவலூர் வட்டாரத்தில் கெடிலம் வி.எஸ்.ஏ மஹால் உள்ளிட்ட இடங்களில் இன்று (ஆக.12) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் காரி பாரி மண்டபம், உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் காட்டுசெல்லூர் திறந்த வெளி மைதானம், சின்னசேலம் வட்டாரத்தில் தொட்டியம் டிசிஆர் மஹால், சங்கராபுரம் வட்டாரத்தில் விரியூர் திறந்த வெளி மைதானம், திருநாவலூர் வட்டாரத்தில் கெடிலம் வி.எஸ்.ஏ மஹால் உள்ளிட்ட இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

பயனாளிகளுக்கு விவசாய நில கிரைய பாத்திரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தாட்கோ மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின விவசாய பயனாளிகள் 3 பேருக்கு விவசாய நிலம் வாங்க 100 % இலவச பத்திரப்பதிவு கட்டணத்துடன் தலா ரூ.10 லட்ச திட்ட தொகையில் 5 லட்சம் மானியம் வீதம் 15 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டு மொத்தமாக 1.62 ஏக்கர் நிலம் கிரையம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட அசல் கிரைய பத்திரம் இன்று வழங்கப்பட்டது

News August 11, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News August 11, 2025

மாவட்ட ஆட்சியரகத்தில் 370 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரடியாக பெற்றுக்கொண்டார். இதில் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தமாக 370 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

கள்ளக்குறிச்சியில் இங்கு போனால் குழந்தைபேறு நிச்சயம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா? இங்கு முக்கிய தெய்வமாக விளங்குபவர் அரவான். சித்திரை மாத பௌர்ணமி அன்று திருநங்கைகள் அரவானை மணப்பது வழக்கம். திருமணத்திற்கு அடுத்தநாள் அரவாண் உயிர் கொடுக்கும் நாளாக கருதப்படுகிறது. அன்று அளிக்கப்படும் உறுமை சோறை உண்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!!

error: Content is protected !!