Kallakurichi

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 15, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு

image

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுமிகள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிவசக்தி(11), ஸ்வேதா(12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குழந்தைகளை கண்காணியுங்கள் பெற்றோர்களே. 

News April 14, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(14.4.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 100— டயல் செய்யலாம்

News April 14, 2025

 கள்ளக்குறிச்சி: குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பயிற்சி மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் வட்டாரம், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருப்பதுடன், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்று இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த கூட்டமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 14, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை,  வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

 கள்ளக்குறிச்சியில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி

image

கள்ளக்குறிச்சியில் ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணம், உணவு செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

News April 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என 100— டயல் செய்யலாம்.

News April 13, 2025

நினைத்தை நிறைவேற்றும் திருக்கோவிலூர் ஆலயம்

image

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இதுவரை வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியும். இந்த புத்தாண்டிற்கு தேவாரம் பாடப்பெற்ற திருக்கோவிலூர் சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!