India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 5180 ஜூனியர் அசோசியேட் (கிளர்க்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 380 காலி இடங்கள் உள்ளன. ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20-28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு மொத்தம் 14 இடங்களில் நடைபெறும். கடைசி நாள்: ஆகஸ்ட் 26. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் 6 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கல்வராயன்மலையில் உள்ள விளாநெல்லி, வேதுார் அரசு துவக்கப் பள்ளி, மேல்பரிகம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள மேட்டுக்குப்பம், ரெட்டியார்பாளையம் அரசுப் பள்ளிகள், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கூத்தனுார் தாங்கல் அரசு துவக்கப் பள்ளி ஆகியவை இதில் அடங்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(13.8.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் பாலசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மாவட்ட நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி மாவட்ட துணை தலைவர்களாக. டாக்டர் வாசுகி .கிருஷ்ணவேணி, பொதுச் செயலாளராக மில்ஹரி அறிவழகன், மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று காலை 9.05 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தியாகிகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்களும் இந்த உத்தரவுக்கு உட்பட்டவை. இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே நொனையவாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (40) என்பவர், 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்தச் சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சத்தியமூர்த்தியைக் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தில் உள்ளது பச்சையம்மன் கோயில். சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற கோயிலான இங்கு வந்து அம்மனை வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் அதிகளவில் இங்கு வந்து நம்பிக்கையோடு வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க…
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
Sorry, no posts matched your criteria.