India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள கலைஞர் திடல் பகுதியில் நாளை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கவுள்ளதாகவும், இதில் தலைமை கழக பேச்சாளர்கள் மூன்று பேர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டம் முகாம்களை சிறப்பாக நடத்திடும் பொருட்டு மனுக்கள் பதிவேற்றம் செய்வது குறித்து அனைத்துத் துறைகளில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் ஆகியோருக்கு இன்று (11.03.2025) பயிற்சி வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும். ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 582 பேரும், மாற்றுத்திறனாளிகள் 16 பேர் என மொத்தம் 598 மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி, அன்பரசு ஆகிய இருவரும் தொட்டியம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெறும் சந்தைக்கு காய்கறி வாங்க செல்லும்போது மெயின் ரோட்டில் உள்ள பழைய ரைஸ் மில் அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த கணபதி அன்பரசன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கணபதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பால்ராம்பட்டு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று மார்ச் 10 ஆம் தேதி அன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகர் கொளத்தூர் கூட்ரோடு அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த குமார், அரசம்பட்டு சேர்ந்த தாமோதரன், சோழவண்டிபுரம் காலிபா ஆகிய 3 பேரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.