Kallakurichi

News December 12, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (12.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 11.12.24 காலை 06.00 மணி முதல் இன்று 12.12.2024 காலை 06.00 மணி வரை பெய்த மழை கள்ளக்குறிச்சி வட்டத்தில்:- 30 மிமீ சங்கராபுரம் :- 27 மிமீ வாணாபுரம் :- 157 மிமீ, உளுந்தூர்பேட்டை:- 55.50மிமீ சின்னசேலம் :- 19மிமீ திருக்கோவிலூர் :- 101மிமீ என கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்:- 389.50 மிமீ மழை பதிவாகி உள்ளது.

News December 11, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 10, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.38, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.50, பீர்க்கன்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.95, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 10, 2024

கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் மீது போக்ஸோ வழக்கு 

image

சோமாசிபாளையத்தை சேர்ந்த அரசு, 20. இவர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி இருவரது வீட்டிற்கும் தெரியாமல் கடத்திச் சென்று, திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றிருந்தபோது திருமண வயதை கடக்காததால் மருத்துவர்கள் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசை தேடி வருகின்றனர்.

News December 9, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (09.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

உயிரிழந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு நிவாரணம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கருணாபுரம் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிதியுதவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News December 9, 2024

எய்ட்ஸ் நோய் குறித்த உறுதிமொழி ஏற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!