India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநாவலூர் துணை மின் நிலையத்–தில் நாளை (ஜன.22) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால, அதன் சுற்றுவட்டார பகுதிகளான கெடிலம், திருநாவலூர், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், தேவியானந்தல், பெரியப்பட்டு, கிழக்கு மருதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
திருப்பாச்சனுார் மற்றும் எறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, பிள்ளையார்குப்பம், புருஷானூர், ராவணஅகரம், திருப்பாச்சனுார், புகைப்பட்டி, கூத்தனூர், நரிப்பாளையம், கூவாடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 305 மணுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 13 மணிக்குள்ளும் என மொத்தமாக 318 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (75), விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப்பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈருடையாம்பட்டு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.21) நடைபெற இருப்பதால் ஈருடையாம்பட்டு, மூங்கில்துறைப் பட்டு, அரும்பரம்பட்டு, ஆற்கவாடி, சுத்தமலை, ஆதனூர், மங்கலம், வடமாமந்தூர், தர்கா, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், பொரசப்பட்டு, மேல்சிறுவள்ளூர், வடபொன்பரப்பி, வடக்கீரனூர், சீர்பாதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நியமனம் செய்வது தொடர்பாக கட்சியின் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு இன்று பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவராக பாலசுந்தரம் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 34,793 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடக்கிறது. நேற்று வரை 1.87 கோடி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 85 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பயனாளர்களுக்கு வரும் 25ஆம் தேதி வரை வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.