India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான மருத்துவக் குழு தேர்வு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 112 மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் மாதம் ரூ.1500 பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (10.1.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கள்ளக்குறிச்சி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், சேலம், மதுரை, கடலூர், நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளாகக் முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எடுத்து பழமை கழித்தல் புதியன புகுத்துதல் போன்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆகையால் நமது முன்னோர்களின் வழிகாட்டுதல்படி மக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இணையவழி சான்றுகள், பட்டா மாற்றம், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம், விலையில்லா வேட்டி, சேலை விநியோகம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாதாந்திர வருவாய் நிர்வாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் அலுவலகத்தில் 1.1.2025 தொடக்க காலாண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், புதுப்பிக்காத இளைஞர்கள் வரும் 31.3.2025 தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 12 வார்டில் உள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினை ஒன்றிய செயலாளர் வசந்தவேல் பொதுமக்களுக்கு கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
தியாகதுருகம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், எறஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 15 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.