Kallakurichi

News February 11, 2025

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 315 கோரிக்கை மனுக்கள்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மகளிர் உரிமை தொகை, கடனுதவி, குடிநீர் பிரச்னை, சாலை வசதி, வேலை வாய்ப்பு, வேளாண், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News February 10, 2025

125 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மிசன் வத்சால்யா திட்டத்தின்படி 2024-2025ஆம் நிதியாண்டிற்கு 125 குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 4,000 வீதம் 30 லட்சத்திற்கான நிதி ஆதரவு உதவித்தொகையினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வழங்கினார்.

News February 10, 2025

RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 9, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை முதல் குழந்தைகளின் சுகாதார நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. சுகாதாரத் துறையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வழங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 9, 2025

போதை பொருட்கள் தொடர்பாக புகார் அளிக்க ‘வாட்ஸ் ஆப்’ எண்

image

தமிழக அரசு ‘போதை பொருள் இல்லா தமிழ்நாடு’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகாரை, 90800 34763 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். இதேபோன்று மாநில அளவில் புகார் அளிப்பதற்காக, 10581 என்ற கட்டணம் இல்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

சுற்றுலா மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கூட்டத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து மாவட்ட சுற்றுலா வளர்ச்சி பொதுக்கூட்டம் ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தலைமையில் நேற்று (7.2.2025 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 8, 2025

டாஸ்மாக்கை மூட மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான கடைகள் ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற செவ்வாய்க்கிழமை 11.2.2025 அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டு உள்ளார்.

error: Content is protected !!