India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு வரும் மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் மொத்தமாக 1691 தேர்வாளர்கள் கணினி வழியில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 69 மாற்றுத்திறனாளிகளும், 25 மாற்றுத்திறனாளிகள் சொல்லி எழுதுபவர்களும் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் காவல் உட்கோட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப் பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களது பகுதியில் போதைப் பொருட்கள் விற்பதோ அல்லது பயன்படுத்துவதோ குறித்து தகவல் கிடைத்தால் 9626121985 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த தகுதியான பயனாளிகள் வரும் 15ஆம் தேதிக்குள் இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
சின்னசேலம் அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 50; விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதாகியது. அதனை சரி செய்ய நேற்று மதியம் 1:00 மணியளவில் கிணற்றில் இறங்கினார். அப்போது, தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சென்ற சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கமுத்துவின் உடலை மீட்டனர். சின்னசேலம் போலீசார் விசாரணை
சின்னசேலம் அடுத்த பெத்தானுாரை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி சடையம்மாள் (55).மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த 2ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவன், பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வேலுமணி(53) என்ற நபர் சிறுவனுக்கு லிப்ட் தருவதாக அழைத்துச் சென்று காப்பு காட்டுக்குள் கத்தியை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் வேலுமணியை போக்சோவில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சிமாவட்டம் தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனியன். 13 வயது சிறுமியிடம் நேற்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முனியன் மீது போக்சோ சட்டத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் திட்ட வரைபடத்தினையும் பார்த்து கட்டிட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.