Kallakurichi

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் பணி புரிய அறிய வாய்ப்பு!

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்

image

உளுந்துார்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி(57), இவர் சில வாரங்களுக்கு முன், 5ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதேபோல, சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமதுயாகூப்(58), இவர் 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் போக்சோவில் கைது செய்தது.

News February 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 21.2.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News February 21, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான மதுசூதனன் ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.

News February 21, 2025

கள்ளக்குறிச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள தமிழ் வாழ்க போஸ்டர்

image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், நீலமங்கலம் கூட்ரோடு மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று தமிழ் வாழ்க என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் வாழ்க என்ற சுவரொட்டி கள்ளக்குறிச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

News February 21, 2025

மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை மார்ச்.20ஆம் தேதி ஒத்திவைப்பு

image

கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை விசாரிக்க மாணவி ஸ்ரீமதியின் தாய் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்திரவிட்டார்.

News February 21, 2025

சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை

image

கள்ளக்குறிச்சி அடுத்த கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதேபோல, சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்த முகமதுயாகூப் என்பவர் 6ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2025

+2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலூர் (வாணாபுரம்) அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வரும் 26.02.2025 அன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை +2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்  தலைமையில் நடைபெற உள்ளது.  ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றுவார்.

News February 21, 2025

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கண்காணிப்புக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 21, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!