Kallakurichi

News March 9, 2025

இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது

image

சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகர் கொளத்தூர் கூட்ரோடு அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த குமார், அரசம்பட்டு சேர்ந்த தாமோதரன், சோழவண்டிபுரம் காலிபா ஆகிய 3 பேரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

News March 9, 2025

25 வழித்தடங்களில் விரைவில் மினிபேருந்து இயக்க அனுமதி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மினி பஸ் இயக்க பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உளுந்தூர்பேட்டையில் 15 வழித்தடங்களில் 44 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 வழித்தடங்களுக்கு 18 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில், 25 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

News March 9, 2025

வீட்டு மனை பட்டா கலெக்டர் உத்தரவு

image

மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள புறம்போக்கு நிலங்கள், பட்டா இல்லாத நிலங்கள், அரசு விதிமுறைக்கு உட்பட்டு முறையாக கணக்கெடுப்பு செய்திட வேண்டும், நகரப் பகுதிகளில் வீடுகள் கட்டி வீட்டு மனைப்பட்டா பெறாத நபர்களை கணக்கீடு செய்து தகுதியின் அடிப்படையில் பட்டாக்கள் வழங்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 9, 2025

பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளி பலி

image

க.செல்லம்பட்டையை சேர்ந்தவர் கணேசன். திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவு செய்ய திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தார். அடுத்த நாள் கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 9, 2025

கள்ளக்குறிச்சிக்கு நாளை அமைச்சர் வருகை

image

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டிடத் தொழிலாளர் நல சங்க கட்டிடத்தினை நாளை தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்க

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

சென்டர்மீடியனில் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோட்டைமேட்டை சேர்ந்தவர் செந்தில், இவர் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் பொழுது. இரவு 11:40 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செந்திலை மீட்டு அரசு மருத்துவகல்லூரிக்கு கொண்டுசென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!