Kallakurichi

News March 1, 2025

அரிசி ஆலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில், அளவை முகவருக்கு அனுப்பப்பட்ட நெல் அரவைப் பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன இருந்தனர்.

News March 1, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் அவசர கால மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், கருணாபுரம், வினாயகாநகர் கோட்டை மேடு, சடையம்பட்டு, குதிரைச்சந்தல் , காரனூர், மட்டிகைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று (1.3.2025) காலை 7 மணி முதல் 8.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News February 28, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது மாவட்டத்தில் 4 லட்சத்தி 43 ஆயிரத்து 547 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் சரியான எடை அளவு இருக்கிறதா, பொருட்கள் விநியோகம் செய்கிறார்களா? ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து ரேஷன் கடை கண்காணிக்கும் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

News February 28, 2025

திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அறிமுக கூட்டம் வரும் 2.3.2025 மதியம் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 28, 2025

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல்

image

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 66 உயிர்களை பலிகொண்ட வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் சாராயம் காய்ச்சியதாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

News February 28, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், உள்ளாட்சி அமைப்புகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (27.02.2025) நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 27, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2025

மாவட்டத்தில் நான்கு துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் பாண்டி, சுதாகர், சண்முகம், சிங்காரவேல் ஆகிய நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!