Kallakurichi

News April 28, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 27-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
மகரூர் கைலாசநாதர் கோயில்.
தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.
ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.
இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் அம்பலம் ஆகவே தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற மோசடியில் சிக்காமல் உஷாரா இருங்க.

News April 26, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 26-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)

News April 26, 2025

கள்ளக்குறிச்சியில் வேலை; தேர்வு இல்லை!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விற்பனை செயலர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. BBA, MBA முடித்த, 35 வயதுக்குட்பட்டோர் <>விண்ணப்பிக்கலாம்<<>>. நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளோர் மே 2, 2025 அன்று காலை 11:30 மணிக்கு சின்னசேலம் பைபாஸில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!

News April 26, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயில்

image

கள்ளக்குறிச்சி ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 25, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வரும் மே10ம் தேதி பாவந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

error: Content is protected !!