India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும் கிராம நிர்வாக அலுவலரின் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா மற்றும் பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகை, 535 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையராக பதவி வகித்து வந்த குப்புசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையராக செந்தில்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கலால் உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சக அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் சின்னசேலம் தாசில்தார் மற்றும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பயன்பெற வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தகுதியான பயனாளிகள் மார்ச் 15ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 20 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முதல் கட்டமாக திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கீழ்குப்பம், நாகலூர், காடியார் ஆகிய 20 கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், விவசாயிகள் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மற்றும் உளுந்துார்பேட்டை பெஸ்கி ஆகிய இரு மேல்நிலைப்பள்ளிகளில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், 24 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மொத்தமாக 1,800 அலுவலர்கள் பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
சின்னசேலத்தில் லாரி ட்யூபில் சாராயம் விற்பனை செய்த ஞானவேல் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விரைவில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாவார் என போலீசார் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கருணாபுரத்தில் எழுந்த மரண ஓலங்கள் நாட்டையெ அதிரச் செய்தன. மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 68 பேர் தங்கள் உயிரை இழந்தும் சாராய வியாபாரம் அடங்கவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.