India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கோட்டைமேட்டை சேர்ந்தவர் செந்தில், இவர் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் பொழுது. இரவு 11:40 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செந்திலை மீட்டு அரசு மருத்துவகல்லூரிக்கு கொண்டுசென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை துறை சார்பில் 2024-25-ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யப்பட்ட சிறப்பு மற்றும் ரபி பருவ பயிர்களுக்கான மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோவிந்தராஜபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவர் இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருவதால், அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் இன்று உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தெங்கியாநத்தம் சேர்ந்த பெரியசாமி என்பவர் தெற்குபட்டி அருகே கள்ளச்சாராயம் கடத்தி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சாராய விற்பனை செய்யும் குற்றத்தில் ஈடுபட்டு வந்ததால் இவரது நடவடிக்கை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பெரியசாமியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கியில் கொள்ளையன் நுழைய முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் மிரண்டு திருடன் ஓடியனான். இதனால், 100 கிலோ தங்கம் தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகின்றனர். வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று மாலை வங்கிப் பணிகள் முடிவடைந்து வங்கியின் மேலாளர் வங்கி மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது வங்கியின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.உடனடியாக வங்கி மேலாளர் வங்கி உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் திருடு போகவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தானம், மற்றும் மயிலாடுந்தாங்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன் கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.