Kallakurichi

News July 4, 2025

விதை சேமிப்பு கிடங்கு திறப்பு விழா

image

வடக்கநந்தலில் வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.60 லட்சம் மதீப்பீட்டில் 250 மெட்ரிக் டன் கொள்முதல் விதை சேமிப்பு கிடங்குதிறப்பு விழா தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

News July 4, 2025

கள்ளக்குறிச்சி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம்

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த <>லிங்க்<<>> மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மாவட்ட எஸ்.பி-யிடமும் (04151-221313) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.* நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937682>>தொடர்ச்சி<<>>

News July 4, 2025

புகார் அளிக்க வழிமுறைகள்

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.

News May 8, 2025

டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து இன்று முதல் ( மே.08) வரும் 20.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News May 8, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

image

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.

News May 8, 2025

கள்ளக்குறிச்சி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தார்.

News May 8, 2025

கள்ளக்குறிச்சி: இலவச தொழில் பயிற்சி வகுப்புகள்

image

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மோட்டார் காயில் கட்டும் பயிற்சி. காலம் 30 நாட்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது 18 முதல் 45 வரை. கல்வி தகுதி 8ஆம் வகுப்பு முதல், பயிற்சி காலங்களில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். நேர் காணல் நடைபெறும் நாள் 10.05.2025. கூடுதல் தகவலுக்கு 04151-225544, 73394 14616 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News May 8, 2025

அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலிடம்

image

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த நோயல் ஜாய்சி 595 மதிப்பெண்களை கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News May 7, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மே 1–ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!