India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி, இந்திலி, டாக்டர். ஆர். கே. எஸ்.கல்லூரி மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு 19 வயதுக்குட்பட்டவருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8300051907 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட செயலாளர் உதயசூரியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்,
வருகின்ற 9 ஆம் தேதி முக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வராயன்மலை வட்டம், வாரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (33). இவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவர் மீது மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்ரல் 4) ஓராண்டு குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட ரோடுமாமாந்தூர் கிராம அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் அசோக் குமார் கார்க் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வாக்கு சாவடியில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதி உள்ளதா எனவும் மேலும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை குறித்து ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், அஞ்சல் ஓட்டுக்களை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். இதற்கான படிவங்களை யாரிடமும் ஓட்டுக்களை ஒப்படைக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சல் ஓட்டுகள் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அடுத்த வஞ்சரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முகமதியர்பேட்டை கிராம பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களின் மௌன நாடக நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த முறைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று அவரது உடல் ஏரியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.