Kallakurichi

News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 7, 2025

மின்விசிறியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

image

சந்தைமேட்டை சேர்ந்தவர் குருநாதன். சித்தலூரை சேர்ந்த பரத் என்பவரிடம் வண்டியை அடமானம் வைத்து நண்பருடன் சேர்ந்து குடித்துள்ளார். பின்னர் அந்த வண்டியை தருமாறும், பணம் பின்பு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தால் மனஉளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேற்று தியாகதுருகம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்.

News May 7, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 30-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News May 7, 2025

கல்வராயன் மலை இந்தியாவுக்குள் வந்த வரலாறு தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15ல் நாடு சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதும் இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்துள்ளது. ஜாகீர்தார்கள் என்ப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்டது. 1996 ஆம் ஆண்டு முதல்தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

image

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று (ஏப்.30) கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 29-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் POSH சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் 0451228800, 9597846790, 8825894085, 9976992480, 997605067, 93616664416 போன்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

கள்ளக்குறிச்சி ஆவின் நிலையத்தில் வேலை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விற்பனை செயலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 35 வயத்திற்குள் இருக்க வேண்டும். இரு பாலினத்தவர்களும் வரும் மே.2ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்க்காணலில் சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!