India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி(50) சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (மே 7) டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1963இல் அன்றைய முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டும் பணி துவங்கப்பட்ட கோமுகி அணை, 1965 ஆம் ஆண்டு பக்தவத்சலம் காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. 60 ஹெக்டர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் இன்று இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவேந்திரன் இடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீடுகளில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்றும், அவ்வாறு அத்தியாவசிய தேவை இருந்தால் குடிநீர் குடை பருத்தி ஆடைகளை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலரும், அரசு தலைமை கூடுதல் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கோடை வெப்பத்திலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சீரான குடிநீர் வழங்குதல், தினசரி குடிநீர் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்காணித்திடவும், வெப்ப அலை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையின் செயல்பாடுகளை மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் மற்றும் ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 96 % மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு கடுமையாக உழைத்த தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் தலைமையில் PTA நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சியும் முதல் மதிப்பெண் 540 எனவும், ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் 100% தேர்ச்சி சதவீதம் எனவும், முதல் மதிப்பெண் 535 எனவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 91.06% சதவீதமும், இந்த ஆண்டு 92.91% சதவீதம் கடந்த ஆண்டு 30 வது இடத்தை பெற்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறி, தற்போது 29 வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது
Sorry, no posts matched your criteria.