India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திருக்கோவிலூர் தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.